Type Here to Get Search Results !

கொரோனாவிற்கு எதிரான போரில் உலகத் தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதலிடம்; கொரோனா பிடியில் மகாராஷ்டிரா: ஒரே நாளில் 431 பேருக்கு கொரோனா

பிரதமர் நரேந்திர மோடியின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 65 சதவீத ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உலக தலைவர்களிடையே பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார் என்று கருத்துக்கணிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் அனைத்து நாடுகளும் செய்வதறியாமல் ஸ்தம்பித்து உள்ளனர். உலகம் முழுவதும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்துள்ளது. வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே உலக தலைவர்களின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து 'மார்னிங் கன்சல்ட்' நடத்திய கருத்துக்கணிப்பில் ஏப்ரல் 14 நிலவரப்படி பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 65 சதவீத ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாக அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பை குறிப்பிட்டு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு வாழத்து தெரிவித்துள்ளார். அதில், “கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் உலக நாடுகளை பிரதமர் நரேந்திர மோடி வழிநடத்துகிறார். நாட்டு மக்களுக்கு ஒருபுறம் பாதுகாப்பு அளித்து கொண்டே மறுபுறம் உலக நாடுகளுக்கு தேவையான பாதுகாப்புகளை செய்து வருகிறார். இதனால் உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்துள்ளார்“ என்றுள்ளார்.

கொரோனா பிடியில் மகாராஷ்டிரா: ஒரே நாளில் 431 பேருக்கு கொரோனா.... பாதிப்பு எண்ணிக்கை 5649 ஆக உயர்வு
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 431 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5649 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 20 ஆயிரத்து 471 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,959 ஆக உள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5218 ஆக இருந்தது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 431 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 5,649 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad