Type Here to Get Search Results !

திருவள்ளூரில் ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா! தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு

தமிழகத்திலேயே அதிக அளவாக திருவள்ளூரில் இன்று 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 911-லிருந்து 969-ஆக உயர்ந்துள்ளதாக தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

full-width தமிழகத்தில் சமூகப் பரவல் இல்லை. இரண்டாவது நிலையில் தான் உள்ளோம்.  கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் குடும்பத்திற்கு சோதனை செய்யப்படுகின்றது என்று தெரிவித்தார்.

மாவட்ட வாரியாக பார்க்கையில் திருவள்ளூரில் இன்று அதிகபட்சமாக 16 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அடுத்ததாக நாகப்பட்டினம் 12 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு;
மாவட்டம் கொரோனவால் பாதிக்கப்பட்டோர்  10.04.2020 வரை 11.04.2020 மொத்தம்
சென்னை                                     172 10 182
கோவை 86 11 97
திண்டுக்கல் 54 1 55
திருநெல்வேலி  56 56
ஈரோடு 60 60
நாமக்கல் 41 41
ராணிப்பேட்டை 36 36
தேனி 40 40
கரூர் 23 23
செங்கல்பட்டு 40 12 40
மதுரை 25 25
திருச்சி 36 3 39
விழுப்புரம் 23 23
திருவாரூர் 13 13
சேலம் 14 14
திருவள்ளூர் 13 16 29
விருதுநகர் 11 11
தூத்துக்குடி 24 24
நாகப்பட்டினம் 12 12 24
திருப்பத்தூர் 16 16
கடலூர் 14 1 15
திருவண்ணாமலை 10 1 11
கன்னியாகுமரி 15 15
சிவகங்கை 6 6
வேலூர் 11 11
தஞ்சாவூர் 11 11
காஞ்சிபுரம் 6 6
நீலகிரி 7 2 9
திருப்பூர் 26 26
ராமநாதபுரம் 2 2
கள்ளக்குறிச்சி 3 3
பெரம்பலூர் 1 1
அரியலூர் 1 1
தென்காசி 3 3
மொத்தம் 911 58 969
மொத்தமாக பாதிப்பு எண்ணிக்கையை கணக்கிட்டால் சென்னையில் 182 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக கோவையில் 97 பேரும், ஈரோட்டில் 60 பேரும் திண்டுக்கல்லில் 55 பேரும், நெல்லையில் 56 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad