Type Here to Get Search Results !

தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) மட்டும் மேலும் 104 பேருக்கு கொரோனா; தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு

தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) மட்டும் 104 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,162 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது.. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இன்று யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய பாதிப்பில் சென்னையில் 94 பேர், செங்கல்பட்டில் 4 பேர், காஞ்சிபுரத்தில் 3 பேர், விழுப்புரத்தில் 2 பேர் மற்றும் திருவள்ளூரில் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 82 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 82 பேர் மீண்ட நிலையில் இதுவரை 1,210 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவால் இன்று மட்டும் இருவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு;
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,162 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் தீவிரமாகி வருகின்றன. அதில் கேரளா, கர்நாடகாவை தவிர தமிழகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உள்மாவட்டங்களில் பாதிப்புகள் குறைவாக இருந்தாலும், சென்னையில் வரலாறு காணாத அளவில் தொடர்ந்து பாதிப்புகள் உயர்ந்து வருகிறது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றை குறைக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில்; தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா தொற்றால் தற்போது 2,162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இன்று ஒரே நாளில் 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னையில் மட்டும் 94 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 768 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 2 பேர் உயிரிழந்த நிலையில் பணியானவர்களின் எண்ணிக்கை 27-ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் தமிழகத்தில் 1,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம்;
^ 0-12 வயதுக்கு உட்பட்டவர்கள்    :  71ஆண், 56 பெண்; மொத்தம் 129

^ 13-60 வயதுக்கு உட்பட்டவர்கள்  :  1214ஆண்கள், 574 பெண்கள்; மொத்தம் 1,788

^ 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்     :  171ஆண்கள், 74பெண்கள்; மொத்தம் 246

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad