Type Here to Get Search Results !

கமல்ஹாசனின் முதல் அரசியல் பேச்சு... மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?

மதுரையில் கட்சி பெயரை அறிவித்தார் கமல்ஹாசன் | Oneindia Tamil சென்னை: கமல்ஹாசனின் முதல் அரசியல் பேச்சுக்கு மக்கள் அதிக அளவில் வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள். பலருக்கும் அவர் பேசுவது பிடித்து இருக்கிறது. நேற்று மதுரை ஒத்தக்கடையில் தன்னுடைய கட்சியை தொடங்கி கொடியும் ஏற்றிவிட்டார். கமல் நடத்திய முதல் அரசியல் மாநாடு சிறப்பாக நடந்து முடிந்துவிட்டது. மேடையில் பலர் பேசினாலும் கமல் பேசுவது மக்களை அதிக அளவில் கவர்ந்து இருக்கிறது. இதுகுறித்து மக்களே கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

சுமார்தான் பாஸ் கமலின் அரசியல் பேச்சு சிலரை அதிக அளவில் கவரவில்லை. பாரம்பரியமான அரசியல் பேச்சை கேட்டவர்களுக்கு கமலின் பேச்சு பிடிக்காமல் போய் இருக்கிறது. அதனால் கமல் பேச்சு சுமார்தான் என்று 9.63% மக்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

பரவாயில்லை அதேபோல் கமலின் முதல் அரசியல் பேச்சு பரவாயில்லை ரகம் என்றும் பலரு கூறியுள்ளனர். அவரின் பேச்சு சிலரை கொஞ்சம் கவர்ந்து இருக்கிறது. மக்கள் இதனால் அவர் பேச்சு பரவாயில்லை என்று 14.04% மக்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

அரசியல்வாதியா இவர் நேற்றைய இவரது பேச்சு மக்களுடன் மக்களாக கலந்து உரையாடுவது போல இருந்தது. இதனால் அவர் அரசியல் பேசுவது போலவே இல்லை. இதன் காரணமாகவே கமல் பேசுவது அரசியல்வாதி பேச்சு போலவே இல்லை என்று 20.12% மக்கள் தெரிவித்துள்ளனர்.

செம ஆனால் கமல் பேச்சு நிறைய மக்களை கவர்ந்து இருக்கிறது. அதிக மக்கள் அவர் பேசிய பிடித்து இருக்கிறது என்றுள்ளார்கள். அரசியல் பேச்சு போல இல்லையென்றாலும் இவர் பேச்சு மக்களுக்கு நெருக்கமாக இருந்துள்ளது. இதனால் சபாஷ் பலே! என்று 56.22% மக்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad