விரல்விட்டு எண்ணக்கூடிய ஹீரோக்கள் மட்டுமே கோடிகளில் சம்பளம் பெறுகின்றனர். அவர்களிலும் சிலர் ஒரு, ஒன்றரை கோடிகளை தாண்டுவதில்லை. அந்த ஹீரோக்களின் படங்களுக்கு மார்க்கெட் விலையை அதிகரிக்க பிரபல நடிகைகளை ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிலை உருவாகிறது. அப்போது படத்தில் நடிக்கும் ஹீரோவை விட கூடுதல் சம்பளம் தந்து அந்த ஹீரோயின்களை ஒப்பந்தம் செய்கின்றனர். இதில் ஒரு விஷயம் என்னவென்றால் ஹீரோவை பொறுத்தமட்டில் அவர்களுக்கு மார்க்கெட் என்று பார்த்தால் கோலிவுட்டில் மட்டும்தான், ஹீரோயின்களோ தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றிருப்பதுதான் கூடுதல் சம்பளத்தை பெற்றுத் தருகிறது.
பொதுவாக ஹீரோயின்களுக்கு அதிக சம்பளம் என்பது கோலிவுட்டில் மட்டுமல்ல பாலிவுட்டிலும் பொருந்தாத விஷயமாகவே பார்க்கப்படுகிறது. அமிதாப், ஷாருக்கான், நடிகர்களுக்கு மட்டும் ஏன் கூடுதல்? எங்களுக்கும் அவர்களுக்கு சமமாக சம்பளம் தர வேண்டும் என்று ஆங்காங்கே குரல் எழுப்பிக்கொண்டும் இருக்கின்றனர். ஆனால் யாரும் அதை காதில் வாங்கியதாக தெரியவில்லை. கோலிவுட் சினிமாவில் இப்போது 3 நடிகைகள் அதிரடியாக
3 கோடிக்கு மேல் சம்பளம் பெற்று வருகின்றனர்.
அனுஷ்காவுக்கு இந்த பட்டியலில் முதலில் இடம். பாகுபலி படத்துக்கெல்லாம் ரூ. 3 கோடி தொட்டுவிட்ட அவர் தற்போது நடித்து வரும் பாக்மதி தெலுங்கு படத்துக்கு மூன்றரை கோடி சம்பளம் பெற்றிருக்கிறார். அவரைத் தொடர்ந்து தற்போது இந்த உச்சத்தை தொட்டிருக்கிறார் நயன்தாரா. சிரஞ்சீவியின் 151வதுபடமாக தெலுங்கில் உருவாகும் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி. இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம். ஏற்கனவே என்.டி.பாலகிருஷ்ணாவுடன் ஸ்ரீராமராஜ்யம் படத்தில் ஜோடியாக நடித்த நயன்தாரா, பாலகிருஷ்ணாவின் 102வது படத்திற்கு மூன்றரை கோடி கேட்டுள்ளார்.
அதற்கு சம்மதிக்காத நிறுவனம் ஸ்ரேயாவை ஜோடி சேர்த்துவிட்டது. பாலிவுட்டிலிருந்து புதுதென்றலாக கோலிவுட் வருகிறார் ஷ்ரத்தா கபூர். பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தில். பாலிவுட்டை சேர்ந்த பல நடிகைகள் பிரபாஸுடன் ஜோடி சேர மறுத்த நிலையில் ஷ்ரத்தா நடிக்க சம்மதித்தார். ஆனால் தனக்கு மூன்றரை கோடி சம்பளம் தரவேண்டும் என்று கண்டிஷன்போட்டார். படத்தின் பிசினஸை ஒப்பிட்டால் இதெல்லாம் ஜுஜ்ஜுபி... என்று எண்ணியவர்கள் கேட்ட சம்பளத்துக்கு ஒகே சொல்லிவிட்டனர். இளவட்டமாக வலம் வரவிருக்கும் ஷர்த்தா கோலிவுட்டில் முதல்வருடத்தில் அடியெடுத்து வைக்க அனுஷ்கா, நயன்தாரா 12 வருடங்கள் இங்கு தங்கள் ராஜ்ஜியத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
0 Comments