கமல்ஹாசனுக்கு பெருகும் ஆதவு
கமல்ஹாசனுக்கு இளைஞர் கட்சி மற்றும் விதைப்பந்து விழித்தெழு அறக்கட்டளை ஆதரவு தெரிவித்துள்ளது. அறக்கட்டளை சார்பில் கமல் அலுவலகத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை அரசின் இணையதளத்துக்கு அனுப்பி வைக்கும்படி நடிகர் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக அமைச்சர்கள் மற்றும் நடிகர் கமலஹாசனுக்கும் இடையேயான மோதல் முற்றி வருகிறது. தமிழக அரசு மீது கமல் லஞ்ச ஊழல் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு அமைச்சர்கள் பதிலடி கொடுத்திருந்தனர்.
இந்த நிலையில் நடிகர் கமலஹாசன் நேற்று இரவு டுவிட்டரில் அறிக்கை வெளியிட்டார். அரசின் ஊழல் தொடர்பாக பொதுமக்கள் ஆதாரத்துடன் அரசுக்கு இணையதளத்தில் புகார் அனுப்பும்படி கேட்டிருந்தார். இறுதியாக ஊழல் புகார் அளிக்க வேண்டிய இணைய முகவரியும் குறிப்பிட்டிருந்தார். இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் கமல்ஹாசன் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.