ரத்த அழுத்தத்தை குறைக்கும் அன்னாசி




நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மலச்சிக்கலை போக்க கூடியதும், ஒற்றை தலைவலியை சரிசெய்யவல்லதும், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டதுமான அன்னாசி பழத்தின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.
 
அன்னாசி பழம் நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் மிகுந்தது. இதனால் மலச்சிக்கல் இல்லாமல் செய்கிறது. கர்ப்ப பையை தூண்டும் தன்மை உடையது. அன்னாசியில் வைட்டமின் பி-6 உள்ளது. வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும். வயிற்றை சுத்தப்படுத்தும். ரத்த ஓட்டத்தை சீர்செய்யும்.

அன்னாசி பழத்தை பயன்படுத்தி வயிறு உப்புசத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அன்னாசி பழம், ஏலக்காய், பனங்கற்கண்டு.செய்முறை: ஒரு பாத்திரத்தில் அன்னாசி பழச்சாறு எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஏலக்காய் தட்டி போடவும். இதில், பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர வயிறு உப்புசம் சரியாகும். வயிற்றில் உள்ள வாயு வெளியேறும். வயிற்று வலி, சிறுநீர் சுருக்கு, சிறுநீர்தாரை எரிச்சல் குணமாகும்.

அன்னாசி பழத்தை பயன்படுத்தி ஒற்றை தலைவலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

 தேவையான பொருட்கள்:

அன்னாசி, இஞ்சி, சீரகம்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 5 முதல் 10 மில்லி அளவுக்கு இஞ்சி சாறு எடுக்கவும். இதனுடன், 50 மில்லி அன்னாசி பழச்சாறு, அரை ஸ்பூன் சீரகப்பொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர ஒற்றை தலைவலி குணமாகும். நீண்டநேரம் நிற்பவர்கள், உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு கால்களில் ரத்தம் தேங்கி ஏற்படும் வலியை போக்கும் மருந்தாக அன்னாசி விளங்குகிறது. இதய அடைப்பு வராமல் தடுக்கிறது. புற்றுகளை உண்டாக்கும் நச்சுக்களை வெளித்தள்ளும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

அன்னாசி பழத்தை பயன்படுத்தி மலச்சிக்கல், வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றும்  மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அன்னாசி, விளக்கெண்ணெய்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் விட்டு சூடு செய்யவும். எண்ணெய் கொதி வந்ததும் அடுப்பை நிறுத்திவிட்டு, 50 முதல் 100 மில்லி அன்னாசி பழச்சாறு சேர்த்து கலந்து, வாரம் ஒருமுறை என 3 வாரங்கள் குடித்துவர வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும். மலச்சிக்கல் பிரச்னை தீரும். உள் உறுப்புகள் முறையாக செயல்படும். உடலுக்கு பலம் தரும் அன்னாசியை பயன்படுத்துவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.படர்தாமரைக்கான மேல்பூச்சு மருத்துவம் குறித்து பார்க்கலாம். சாலையோரங்களில் காணப்படும் மஞ்சள் நிற பூக்களை உடைய சீமை அகற்றியின் இலைகளை நசுக்கி எண்ணெயில் இட்டு தைலப்பதத்தில் காய்ச்சி ஆறவைத்து பூசிவர படர்தாமரை குணமாகும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url