Type Here to Get Search Results !

போதை மருந்து விவகாரம் : முமைத்கானை போலீஸ் தேடுகிறது




போதை மருந்து பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக ரவிதேஜா, தருண், நவ்தீப், நந்து, சார்மி, முமைத்கான், சின்னா, சுப்பராஜு, தனிஷ் உள்ளிட்ட 12 பேருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முமைத்கானுக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவருக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவரது விலாசம் தெளிவில்லாமலிருப்பதே இதற்கு காரணம்.

ஐதராபாத் சம்ஜாஜிகுடா பகுதியில் அவர் வசிப்பதாக கூறப்பட்டது. அங்கு சென்று பார்த்தபோது அவர் இல்லை. இதனால் போலி விலாசம் தந்து அவர் எஸ்ஸாகியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையில் புனேவில் நடக்கும் டி.வி நிகழ்ச்சி ஒன்றில் முமைத்கான் பங்கேற்றிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை தேடி போலீஸார் புனே செல்கின்றனர்.

போதை மருந்து விவகாரத்தில் சிக்கியவர்கள் எந்தெந்த நாளில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்க துறை தெரிவித்திருக்கிறது. புரி ஜெகநாத் இன்றும்(19ம் தேதி), சார்மி நாளையும் முமைத்கான் 21, தருண் 22, ஷியாம் கே நாயுடு 23, சின்னா 25, நவ்தீப் 26, சுப்பராஜு 27, நந்து-ரவிதேஜா 28ம் தேதியும் ஆஜராக வேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad