இந்தியாதொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு: தண்ணீரில் மூழ்கிய குஜராத் மாநில கிராமங்கள்!




 
அகமதாபாத்:

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குஜராத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கானோர் பெரும் பாதிப்புக்குளாகியுள்ளனர். குஜராத்தின் பாப் நகரில் பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. வெள்ளநீர் கிராமங்களை சூழுந்துள்ளதால் வாகனங்கள் ஆற்றில் இழுத்துச்செல்லப்பட்டன. இதனிடையே நிலைமை மோசமடைந்து வருவதால் மீட்பு நடவடிக்கைகள, நிவாரண பணிகள்  தீவிரவமாக நடைபெற்று வருகின்றன. மீட்பு பணிகளில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

பல்வேறு நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதி மக்களுக்கு  உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையே கனமழைக்கு காரணம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்தி வருகிறது. 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url