தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை மீண்டும் சம்மன்




சென்னை : தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இடைத்தேர்தல் நடக்கவிருந்த ஆர்.கே.நகரில்  வாக்காளர்களுக்கு 88 கோடி ரூபாய்  பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் ஊடகங்களில் வெளியாயின. இதனையடுத்து சிலரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீடு, அலுவகங்களில் கடந்த ஏப்ரல் 7ம் தேதி வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அப்போது ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இது தொடர்பான வழக்கில் விஜயபாஸ்கர் அவரது மனைவி,சகோதரர் உள்ளிட்டோர் ஏற்கனவே வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

தற்போது விஜயபாஸ்கருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.அதில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அவர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.விஜயபாஸ்கரின் குடும்பத்தினர் வைத்துள்ள கல்குவாரியில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.  
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url