பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ளது : அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல்
வாஷிங்டன் :
தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் முக்கிய இடம் பிடித்துள்ளதாக அமெரிக்கா அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீவிரவாத அமைப்புகள் தொடர்பான 2016 – ம் ஆண்டுக்கான அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் பாகிஸ்தான் மட்டுமின்றி ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈரான், லிபியா உள்ளிட்ட நாடுகளும் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் நாடுகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா, ஜெயிஷ் இ முகமது போன்ற தீவிரவாத அமைப்புகள் இந்தியாவிற்கு எதிரான நாச வேலைகளை செய்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் செயல்படும் தலிபான்கள், தெஹரிக் இ தாலிபான், ஹக்கானி போன்ற அமைப்புகளும் பாகிஸ்தானில் இருந்து தான் உருவாகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளை ஒடுக்குவதில் போதிய அளவிற்கு நடவடிக்கைகளை எடுக்க பாகிஸ்தான் தயங்குகிறது எனவும் அந்த அறிக்கையில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கா அளித்துள்ள இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈரான், லிபியா, எகிப்து, பிலிப்பைன்ஸ், ஏமன், கொலம்பியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளும் உள்ளன.