Type Here to Get Search Results !

பிளாஸ்டிக் மீது போர் தொடுக்கும் ஆசிய நாடுகள்



திரும்பிய பக்கமெல்லாம் பிளாஸ்டிக். ஆழ்கடலின் அடியிலும் பிளாஸ்டிக் கழிவுகள்.

ஆசியாவின் வாடிக்கையாளர் சார்ந்த பொருளாதார வளர்ச்சியால் பிளாஸ்டிக் உற்பத்தி ஆசிய நாடுகளில் பலமடங்கு அதிகரித்தது.

ஆனால் தற்போது அரசுகளும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட மற்றவர்களும் பிளாஸ்டிக்கால் கடலில் ஏற்படும் மோசமான மாசை குறைப்பதற்கான பெரும் முயற்சியை முன்னெடுத்துள்ளனர்.

தமது மாசுகளை அகற்றும் நடவடிக்கையை முன்னெடுக்கப்போவதாக சில ஆசிய நாடுகள் ஐநாவிடம் உறுதி அளித்துள்ளதாக ஐநா சுற்றுச்சூழல் இயக்குநர் எரிக் சோல்ஹெய்ம் தெரிவித்தார்.

குப்பைகளை கையாளும் தனது வழிமுறைகளை மேம்படுத்தப்போவதாக சீனா கூறியுள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் திட்டம் ஒன்றை தாய்லாந்து கொண்டுவருகிறது.

இந்தோனேஷிய அரசு பிளாஸ்டிக் கழிவுகளை கையாள்வது குறித்து குழந்தைகளுக்கு கற்பிக்கிறது.

இவையெல்லாம் முன்னேற்றம் தான் என்றாலும் இவை போதுமானதல்ல என்கிறது கிரீன்பீஸ் அமைப்பு.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad