மும்பை: ஐ.பி.எல் டி20 சீசன் 10 முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை, 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய புனே சூப்பர்ஜயண்ட் இறுதி போட்டிக்குள் நுழைந்தது. முன்னதாக இன்றைய குவாலிஃபையர் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடா்ந்து களமிறங்கிய ரைசிங் புனே சூப்பர்ஜயண்ட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. அந்த அணி வீரர்கள் ரஹானே 56 ரன்களும், திவாரி 58 ரன்களும், தோனி 26 பந்துகளில் 40 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை எடுத்து புனே அணியிடம் தோற்றது. இதனையடுத்து ஐ.பி.எல் டி20 சீசன் 10 தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து புனே சூப்பர்ஜயண்ட் அணி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
0 Comments