Type Here to Get Search Results !

கண்நீர் அழுத்தம் முன்னெச்சரிக்கைகள்





கண்நீர் அழுத்த உயர்வால் ஏற்படும் பார்வை பாதிப்பு என்பது ஈடுசெய்ய முடியாத நிரந்தரப் பாதிப்பு. இதைத் தடுப்பதற்கு எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்?

> அடிக்கடி தலைவலி, குண்டு பல்பைச் சுற்றி வண்ண வண்ண வட்டங்கள், பக்கப் பார்வையில் பிரச்சினை போன்றவை இருந்தால், உடனே கண் மருத்துவரிடம் கண்நீர் அழுத்த உயர்வைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

> பொதுவாக 40 வயதை நெருங்கும்போதுதான் கண்நீர் அழுத்த உயர்வு பெரும்பாலும் ஏற்படும் என்பதால், அந்த வயதில் அனைவரும் கண்களைக் கட்டாயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

> ரத்த உறவில் யாருக்காவது கண்நீர் அழுத்த உயர்வு ஏற்கெனவே இருந்தால், அத்தகையவர்கள் 40 வயதுக்கு முன்னரே கண்நீர் அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.

> கண்நீர் அழுத்தம் உயர மன அழுத்தமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, மன அழுத்தத்தை (Stress) கட்டாயம் கட்டுப்படுத்த வேண்டும்.

> கண்நீர் அழுத்த உயர்வைப் பொறுத்தவரையில் தொடர் சிகிச்சையுடன் கண்காணிப்பும் அவசியம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad