சிகாகோ: அமெரிக்காவில் நடைபெற்ற டபுள்யு.டபுள்யு.இ உலக பொழுதுபோக்கு மல்யுத்த போட்டியில், இந்திய வீரர் ஜிந்தர் மகால் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் பிரபல வீரர் ராண்டி ஆர்ட்டனுடன் (37 வயது) மோதிய ஜிந்தர் மகால் (30 வயது) அபாரமாக செயல்பட்டு WWE சாம்பியன் பெல்ட்டை கைப்பற்றினார்.
இந்த தொடரில் கிரேட் காளியை தொடர்ந்து சாம்பியன் பட்டம் வெல்லும் 2வது இந்திய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. ஜிந்தர் மகாலுடன் பைனலில் போட்டியிட்ட ராண்டி ஆர்ட்டன் 13 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
0 Comments