Type Here to Get Search Results !

மகனால் உயிரைவிட்ட பிரபல பாடகரின் ப்ளாஷ்பேக்




தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த பாடகர்களுள் ஒருவர் மலேசியா வாசுதேவன். எவ்வளவு கடினமாக பாடலையும் அழகாகப் பாடிய அசாத்திய திறமைசாலி. இவரது தமிழ் உச்சரிப்பு அட்சர சுத்தமாக இருக்கும். மலேசியாவில் பிறந்த இவர், சினிமா வாய்ப்புக்காக சென்னை வந்தார்.  எம்எஸ் விஸ்வநாதன் இசையில் டெல்லி டு மெட்ராஸ் படத்துக்காக முதல் பாடல் பாடினார். ஆனாலும் அவருக்கு பெரிதாக அப்போது வாய்ப்புகள் இல்லை. இசைஞானி இளையராஜாதான் மலேசியா வாசுதேவனுக்கு மிகப் பெரிய வாய்ப்பை வழங்கினார்.  தான் இசையமைத்த பதினாறு வயதினிலே படத்தில். கவியரசு கண்ணதாசனின் ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு..’ என்ற அந்தப் பாடல் ஒரே இரவில் வாசுதேவனை முன்னணிப் பாடகராக்கியது.  அதன் பிறகு ஏராளமான படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடினார். கோடைகால காற்றே, அள்ளித் தந்த பூமி, அடியாடு பூங்கொடியே, தங்கச் சங்கிலி என அவர் பாடிய மெலடிப் பாடல்கள் காலத்தால் அழியாதவை. ரஜினி – கமல் இருவரின் படங்களுக்கும் தொடர்ந்து பாடியவர் மலேசியா வாசுதேவன்.  குறிப்பாக ரஜினிக்கு இவர் குரல் பொருத்தமாக இருந்ததால், அவர் படங்களில் ‘அருணாச்சலம்’ வரை தொடர்ந்து பாடி வந்தார். 85 திரைப்படங்களில் நடித்துள்ளார் மலேசியா வாசுதேவன்.  முதல்வசந்தம், ஒரு கைதியின் டைரி, ஊர்க்காவலன், ஜல்லிக்கட்டு என வெற்றிப்படங்கள் பலவற்றில் வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.  தமிழக அரசின் கலைமாமணி விருதினையும் பெற்றுள்ளார். புதிய பாடகர்களின் வரவு மற்றும் அவரது உடல்நிலை காரணமாக சில ஆண்டுகளாக அவரால் பாட முடியாமல் அவஸ்தைப் பட்டு வந்தார்.  மகன் யுகேந்திரனை ஹீரோவாக நடிக்க வைக்க முயற்சிகள் செய்தார்.வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மகனும் சுய முயற்சிகள் இல்லாமல் ஜாலியாக பொழுதைக் கழித்தார் என்கிறார்கள். வேறு வழி இன்றி சொந்தப் படம் எடுக்கும் முடிவிற்கு வந்தார்.  சம்பாதித்த பணத்தை எல்லாம் படத்தில் கொட்டினார்.பணம் போதவில்லை. செலவுகள் எகிறியது. அதிக வட்டிக்கு பல லட்சங்கள் கடன் வாங்கினார்.  ஒரு வழியாக படம் முடிந்தது. ஆனால் விற்கவில்லை. துடித்துப் போனார் வாசுதேவன். என்ன செய்வது என்று தெரியவில்லை. நஷ்டம். அத்தனையும் நஷ்டம்.  சொந்த ரிலீஸ் செய்யும் தவறான முடிவிற்கு வந்தார். அதற்கும் கடன் வாங்கினார். படம் ரிலீஸ் ஆனது. ஒருவாரம் கூட படம் ஓடவில்லை.  பக்கவாதம் தாக்கியது. படுக்கையில் வீழ்ந்தார். உதவி செய்ய நாதி இல்லை. பாடவும் இயலவில்லை.  கலங்கிய நிலையில், மனம் பேதலித்து படுத்த படுக்கையாய் கிடந்தார். கடன் கொடுத்தவர்கள் கழுத்தை நெரித்தார்கள்..! மன உளைச்சல் அதிகமாகி ஒரு நாள் யாருமற்ற நேரத்தில் இறந்து போனார், அந்த சிம்மக்குரல் பாடகர். பூங்காற்று திரும்புமா  



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad