பாகிஸ்தான் ராணுவத்தில் சேர விருப்பம் தெரிவித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்





பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப் போட்டியில் வரலாறு காணாத பாதுகாப்பு வழங்கிய பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார் சாமுவேல்ஸ்.  பாகிஸ்தான் சூப்பர் லீக் 2-வது சீசனின் இறுதிப் போட்டி லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெற்றது. வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொண்டதால் வரலாறு காணாத பாதுகாப்பு வழங்கப்பட்டது.  கடும் பாதுகாப்பிற்கிடையில் நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டேரன் சமி தலைமையிலான பெஷாவர் ஷல்மி அணி கிண்ணத்தை வென்றது. அந்த அணியில் மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரரான சாமுவேல்ஸும் இடம்பிடித்திருந்தார்.  வெற்றி பெற்ற பெஷாவர் ஷல்மி வீரர்கள் பாகிஸ்தான் தலைமை ராணுவத் தளபதியை சந்தித்தனர். அப்போது சாமுவேல்ஸ் வீடியோவில் தன்னுடைய செய்தியை வெளியிட்டிருந்தார்.  அதில் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர விருப்பம் தெரிவித்தார். இதுகுறித்து சாமுவேல்ஸ் கூறுகையில் ‘‘ஐ.சி.சி. மீண்டும் பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டிய வேலையில் இறங்குவது அவசியம். ஏனென்றால், ஏராளமான பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் சொந்த மண்ணில் கிரிக்கெட் போட்டியை பார்க்க ஆசைப்படுகிறார்கள்.  தற்போதைய நிலையில் மீண்டும் பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் நடத்தப்பட வேண்டும். சிறந்த வகையில் பாதுகாப்பு கொடுத்த ராணுவத்திற்கு நன்றி சொல்ல இந்த வாய்ப்பை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்.  பாகிஸ்தான் ராணுவத்தின் உலோகப் பட்டைக்காக (மெட்டாலிக் பேட்ஜ்) காத்துக் கொண்டிருக்கிறேன். ஆகவே, நீங்கள் எப்போது என்னை உங்கள் ராணுவத்தில் சேர்க்க தயாராக இருக்கிறீர்களோ, அப்போது நான் தயார். நான் ஜமைக்கா ராணுவத்தில் இருக்கிறேன். பாகிஸ்தான் ராணுவத்திலும் அங்கம் வகிக்க விரும்புகிறேன்’’ என்றார்



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url