ஐஸ்வர்யா நடனமாடியது ஐ.நா சபை நிகழ்ச்சியே கிடையாது வெளிவந்த உண்மை





மகளிர் தினத்தையொட்டி ஐ.நா சபையில் ஐஸ்வர்யா தனுஷ் நடனம் ஆடியது நம் அனைவருக்கும் தெரியும். அவரின் அந்த நடன வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கிண்டலுக்கு ஆளாகியிருக்கிறார் அவர். எம்.எஸ். சுப்புலட்சுமி அல்லது சுதா ரகுநாதன் போன்ற ஜாம்பவான்கள் போல தானும் திறமையை வெளிப்படுத்தியது போன்ற நினைப்பை ஏற்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ் என பத்திரிகையாளர் பிரமோத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  ஐ.நா. தலைமையகத்தில் உள்ள ஒரு பகுதியில் இந்திய அரசு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடிவிட்டு எம்.எஸ், சுதா போல் சாதனை செய்துவிட்டதாக இந்த பெண் இருக்கிறார்.  இந்திய அரசு அல்லது வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் யாரையாவது தெரிந்திருந்தால் நீங்களும் செய்யலாம். எம்.எஸ். அல்லது சுதா ரகுநாதன் நிகழ்ச்சி தான் உண்மையான ஐ.நா. சபை நிகழ்ச்சி. போலியான கலையை இந்திய அரசு ஊக்குவிப்பதும், இது ஐ.நா. சபை நிகழ்ச்சியே இல்லை என்பதை தெரிவிக்காததும் வெட்கக்கேடு என பிரமோத் தனது ஃபேஸ்புக் போஸ்ட்டில் தெரிவித்துள்ளார்



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url