சிக்சருக்கு போன பந்தை அவுட் என நினைத்து கொண்டாடிய வீரர்




இலங்கை வீரர் மென்டீஸ் அடித்த பந்து சிக்சருக்கு போனதை எதிர் அணியான வங்களதேச வீரர் தவறாக கொண்டாடியுள்ளது சுவாரசியமாக அமைந்துள்ளது.  இலங்கை - வங்கதேசம் இடையேயான கிரிக்கெட் டெஸ்ட் தொடர் தற்போது நடைப்பெற்று வருகிறது.  இதில் இலங்கை வீரர் மெண்டீஸ் 181 ஓட்டங்களுடன் விளையாடி கொண்டிருந்தார்.  அவருக்கு வங்களதேச பந்துவீச்சாளர் முஸ்தப் விசூர் பந்து வீசினார். பந்தை மெண்டீஸ் தூக்கியடிக்க அது பவுண்டரி கோட்டை தாண்டி போனது. அங்கு நின்றிருந்த வங்களதேச வீரர் அதை கேட்ச் செய்தார்.  அது சிக்சர் என நடுவர் கையை உயர்த்தி காட்டினார், ஆனால் அது பவுண்டரி கோட்டுக்கு உள்ளே என நினைத்த பந்துவீச்சாளர் முஸ்தப் அதை அவுட் என நினைத்து கத்தி கொண்டாடினார்.  பின்னர் அது சிக்சர் என உணர்ந்த முஸ்தப் ஏமாந்து போனார்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url