விஸ்வரூபம் படத்தின் பிரச்சனைக்கு யார் காரணம் தெரியுமா
கமல் ஹாசன் சமீபத்தில் தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்து தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தின் மூலம் தொடந்து பதிவு செய்துவந்தார். இதுகுறித்து அவரிடம் பிரபல் தொலைக்காட்சி ஒன்று நேரலையில் நேர்காணல் செய்தது. பல கேள்விகளுக்கான பதிலை கமல் கூறினார். நான் அரசியல் பேசுவதற்கு குடிமகன் என்பது தான் எனது முதல் தகுதி. எளிமையான தலைவர்கள் தேவை. நான் அரசியலை மறக்கவில்லை. தவறுகள் அதிகரிப்பதால் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படுகிறது. சாதி இல்லாமல் ஆக்குவது தான் எனது விருப்பம். தமிழகத்தில் மீண்டும் தேர்தல் வேண்டும். தலைவர்கள் யார் இருக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என அவர் கூறினார். நான் எனது கருத்தை தான் சொல்கிறேன். மக்களை மூளைசலவை செய்ய்வில்லை. நான் பேசினால் மக்களிடம் விரைவில் சேரும் என்பது என் எண்ணம். விஸ்வரூபம் படத்திற்கு வந்த பிரச்சனைகள் எல்லோருக்கும் தெரியும். அதன் பின் அரசியலே தவற இஸ்லாமியர்கள் காரணமல்ல என கமல் கூறினார்.