இந்தியாவில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் இசைக்கப்பட்ட தேசிய கீத்தின் போது இந்திய வீரர் ஒருவர் சூயிங்கம் சாப்பிட்டு கொண்டிருந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா-இங்கிலாந்து மோதிய முதலாவது டி20 போட்டி கான்பூரில் நடைபெற்றது. போட்டி தொடங்கும் முன்பாக வழக்கம்போல இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, முதல் முறையாக இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் களமிறங்கிய பர்வேஸ் ரசூல் தனது வாயில் சுயிங்கம் வைத்து சுவைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறித்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று இரவு 7 மணிக்கு நாக்பூரில் நடைபெறவுள்ள இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது
தேசிய கீதத்தின் போது இந்திய வீரர் செய்த காரியம்
January 30, 2017
0
இந்தியாவில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் இசைக்கப்பட்ட தேசிய கீத்தின் போது இந்திய வீரர் ஒருவர் சூயிங்கம் சாப்பிட்டு கொண்டிருந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா-இங்கிலாந்து மோதிய முதலாவது டி20 போட்டி கான்பூரில் நடைபெற்றது. போட்டி தொடங்கும் முன்பாக வழக்கம்போல இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, முதல் முறையாக இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் களமிறங்கிய பர்வேஸ் ரசூல் தனது வாயில் சுயிங்கம் வைத்து சுவைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறித்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று இரவு 7 மணிக்கு நாக்பூரில் நடைபெறவுள்ள இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது
Post a Comment
0 Comments