Type Here to Get Search Results !

WWE-ல் களமிறங்கவிருக்கும் இந்திய வீரர்





ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றுள்ள இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் தொழில்முறை மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் காட்டிவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  இதுதொடர்பாக தொழில்முறை மல்யுத்தப் போட்டிகளை நடத்துவதில் உலக அளவில் பிரபலமான டபிள்யூ.டபிள்யூ.இ. அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி கென்யான் சிமானைச் சந்தித்துப் பேசியதை சுஷில் குமார் உறுதி செய்துள்ளார். ஆனால், உடனடியாக இந்த விவகாரத்தில் முடிவெடுக்கவில்லை என்றும் சுஷில் குமார் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக சுஷில் குமாரிடம் டபிள்யூ.டபிள்யூ.இ. அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது. மேலும், டிஎன்ஏ போன்ற மற்ற தொழில்முறை மல்யுத்தப் போட்டிகளை நடத்தும் அமைப்புகளுடனும் சுஷில் குமார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad