பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் ஷாகித் அஃப்ரிடி மற்றும் பாகிஸ்தானின் தலைசிறந்த முன்னாள் வீரர் ஜாவித் மியாந்தத் இருவருக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான கருத்து மோதல், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், அப்ரிடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் அளவிற்கு சென்றுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட்டையே உலுக்கியுள்ளது. ஒருநாள் ஆட்டத்திற்கு கடந்த உலகக் கோப்பையுடன் முழுக்கு போட்ட அப்ரிடி, டி20 போட்டிகளில் மட்டும் ஆடி வந்தார், பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் டி20 அணித்தலைவர் பொறுப்பில் இருந்து விடை பெற்றார். எனினும், பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 20 வருடங்களாக விளையாடி வரும் அப்ரிடி ஓய்வு பெறவே விரும்பியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் அப்ரிடி விடை கொடுக்கும் போட்டியில் ஆட விரும்புகிறார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தது. இதுகுறித்து, ஜாவித் மியாந்தத் தெரிவிக்கையில், பணத்திற்காகவே விடை பெறும் போட்டியில் அப்ரிடி ஆட விரும்புவதாக காட்டமாக கூறினார், மேலும் மேட்ச் பிக்ஸிங்கிலும் அவர் ஈடுபட்டார் எனவும் அதற்கு தானே நேரடி சாட்சி என்றும் அதிர்ச்சித் தகவலை கூறினார். இதுமட்டுமல்லாமல், தான் கூறியதை அப்ரிடியால் மறுக்க முடியாது எனவும், தன் குழந்தைகள் மீது ஆணையிட்டு தான் பாகிஸ்தான் கிரிக்கெட்டை விற்கவில்லை என அப்ரிடி கூறவேண்டும் என்று கூறினார். மியாந்தத்தின் தாக்குதலால் வெகுண்டெலுந்த அப்ரிடி, ஜாவித் மீது வழக்கு தொடர இருப்பதாக கூறினார். இதுகுறித்து கேள்விப்பட்ட நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கடந்த 12 ஆம் திகதியன்று அப்ரிடிக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் உள்ளது, ஏனெனில் தாவூத்தின் மகளைத் தான் ஜாவித் மியாந்தத்தின் மகன் திருமணம் செதுள்ளார். இருவருக்குமிடையேயான பிரச்சனை முற்றுவதை உணர்ந்த சக வீரர்களும் முன்னாள் அணித்தலைவர்கள் இம்ரான் கான் மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோர் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நண்பர் ஒருவரின் வீட்டில் இருவரின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் பின்னர் இப்பிரச்சனை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அஃப்ரிடிக்கு கொலை மிரட்டல் விடுத்த நிழல் உலக தாதா
October 19, 2016
0
பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் ஷாகித் அஃப்ரிடி மற்றும் பாகிஸ்தானின் தலைசிறந்த முன்னாள் வீரர் ஜாவித் மியாந்தத் இருவருக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான கருத்து மோதல், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், அப்ரிடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் அளவிற்கு சென்றுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட்டையே உலுக்கியுள்ளது. ஒருநாள் ஆட்டத்திற்கு கடந்த உலகக் கோப்பையுடன் முழுக்கு போட்ட அப்ரிடி, டி20 போட்டிகளில் மட்டும் ஆடி வந்தார், பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் டி20 அணித்தலைவர் பொறுப்பில் இருந்து விடை பெற்றார். எனினும், பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 20 வருடங்களாக விளையாடி வரும் அப்ரிடி ஓய்வு பெறவே விரும்பியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் அப்ரிடி விடை கொடுக்கும் போட்டியில் ஆட விரும்புகிறார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தது. இதுகுறித்து, ஜாவித் மியாந்தத் தெரிவிக்கையில், பணத்திற்காகவே விடை பெறும் போட்டியில் அப்ரிடி ஆட விரும்புவதாக காட்டமாக கூறினார், மேலும் மேட்ச் பிக்ஸிங்கிலும் அவர் ஈடுபட்டார் எனவும் அதற்கு தானே நேரடி சாட்சி என்றும் அதிர்ச்சித் தகவலை கூறினார். இதுமட்டுமல்லாமல், தான் கூறியதை அப்ரிடியால் மறுக்க முடியாது எனவும், தன் குழந்தைகள் மீது ஆணையிட்டு தான் பாகிஸ்தான் கிரிக்கெட்டை விற்கவில்லை என அப்ரிடி கூறவேண்டும் என்று கூறினார். மியாந்தத்தின் தாக்குதலால் வெகுண்டெலுந்த அப்ரிடி, ஜாவித் மீது வழக்கு தொடர இருப்பதாக கூறினார். இதுகுறித்து கேள்விப்பட்ட நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கடந்த 12 ஆம் திகதியன்று அப்ரிடிக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் உள்ளது, ஏனெனில் தாவூத்தின் மகளைத் தான் ஜாவித் மியாந்தத்தின் மகன் திருமணம் செதுள்ளார். இருவருக்குமிடையேயான பிரச்சனை முற்றுவதை உணர்ந்த சக வீரர்களும் முன்னாள் அணித்தலைவர்கள் இம்ரான் கான் மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோர் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நண்பர் ஒருவரின் வீட்டில் இருவரின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் பின்னர் இப்பிரச்சனை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
Post a Comment
0 Comments