பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரு புகைப்படம் மூலம் மதம் சார்ந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். போர்ச்சுகல் மற்றும் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரராக திகழந்து வரும் ரொனால்டோவை சமூக வலைதளத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் ரொனால்டோ வெளியிட்ட ஒரு புகைப்படம் அவரின் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த புகைப்படத்தில் ரொனால்டோ, கவுதம் புத்தர் சிலைக்கு முன் கால் வைத்து போஸ் கொடுத்துள்ளார். இதை கண்ட அவரின் ரசிகர்கள், இது ஒரு குறிப்பிட்ட மதத்தினரை அவமதிப்பது போல் உள்ளது. இச்செயலை ஒரு தலைசிறந்த கால்பந்து வீரர் செய்தது கண்டிக்கத்தக்கது என கடுமையாக விமர்சித்துள்ளனர். பலர், குறித்த புகைப்படத்தை ரொனால்டோ நீக்கி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
பிரபல மதத்தை அவமதித்த ரொனால்டோ
October 27, 2016
0
பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரு புகைப்படம் மூலம் மதம் சார்ந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். போர்ச்சுகல் மற்றும் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரராக திகழந்து வரும் ரொனால்டோவை சமூக வலைதளத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் ரொனால்டோ வெளியிட்ட ஒரு புகைப்படம் அவரின் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த புகைப்படத்தில் ரொனால்டோ, கவுதம் புத்தர் சிலைக்கு முன் கால் வைத்து போஸ் கொடுத்துள்ளார். இதை கண்ட அவரின் ரசிகர்கள், இது ஒரு குறிப்பிட்ட மதத்தினரை அவமதிப்பது போல் உள்ளது. இச்செயலை ஒரு தலைசிறந்த கால்பந்து வீரர் செய்தது கண்டிக்கத்தக்கது என கடுமையாக விமர்சித்துள்ளனர். பலர், குறித்த புகைப்படத்தை ரொனால்டோ நீக்கி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment
0 Comments