Type Here to Get Search Results !

தமிங்க பிரசாத் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சனத் ஜெயசூரியா




ஊதிய ஒப்பந்த பட்டியலில் இலங்கை வீரர் தமிங்க பிரசாத் சேர்க்கப்படாதது பற்றி தேர்வுக் குழுத் தலைவர் சனத் ஜெயசூரியா விளக்கம் அளித்துள்ளார்.  இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளராக இருப்பவர் தமிங்க பிரசாத். இவர் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டார். கடந்த ஆண்டில் 8 போட்டியில் 38 விக்கெட்டுகளை 22.92 சராசரியில் வீழ்த்தியுள்ளார்.  இருப்பினும் அறிவிக்கப்பட்ட 2016-17 ஊதிய ஒப்பந்தப் பட்டியலில் 17 வீரர்களில் தமிங்க பிரசாத் பெயர் இடம்பெறவில்லை.  இது குறித்து விளக்கம் அளித்த தேர்வுக் குழுத்தலைவர் சனத் ஜெயசூரியா, தமிங்க பிரசாத் காயம் காரணமாக தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.  அவரால் அடுத்த வருடம் முழுவதும் விளையாட முடியுமா என்று தெரியவில்லை. காயத்தால் அவர் 6-7 மாதங்கள் விளையாடமுடியாது.  இதனாலே அவரை ஊதிய ஒப்பந்தப் பட்டியலில் இணைக்கவில்லை. அவர் குணமடைந்துவிட்டால் அவரை இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad