Type Here to Get Search Results !

கோஹ்லியை பிரிந்தது ஏன்? உண்மையை போட்டு உடைத்த அனுஷ்கா




இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியுடனான காதல் முறிவு பற்றி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா மனம் திறந்து பேசியுள்ளார்.  இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர்.  இந்நிலையில் அனுஷ்கா சுல்தான் படத்தில் நடிப்பது தொடர்பாகவும், திருமண பேச்சு தொடர்பாகவும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதில் இருவரும் தங்களது காதலை முறித்துக் கொண்டதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.  இந்நிலையில் அனுஷ்கா சர்மா ஒரு பேட்டியில், கோஹ்லியும் நானும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டோம் என்று கூறியுள்ளார்.  அவர் கூறுகையில், நானும், விராட் கோஹ்லியும் முதலில் நண்பர்களாகத்தான் பழகினோம். ஆனால் பிறகு காதலர்களாக மாறினோம். ஆனால் அந்த காதல் நீண்ட நாள் நீடிக்கவில்லை.  எனக்கு யார் மீதும் எளிதில் ஈர்ப்பு வராது. அப்படியே வந்தாலும் அது நீண்ட நாள் நீடிப்பதில்லை என்று எனக்கு இப்போது புரிந்துவிட்டது என்று கூறியுள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad