டெல்லியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்று சமன் செய்தது. இதன் மூலம் நியூஸிலாந்துக்காக தொடரின் முதல் சதத்தை கேன் வில்லியம்சன் அடிக்க தொடரின் முதல் வெற்றியை ஈட்டியது நியூஸிலாந்து.
முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 242 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் தோனி 39 ரன்கள் எடுத்து சவுதியின் பந்து வீச்சில் சவுதியே பிடித்த அதி அற்புதமான கேட்சிற்கு வெளியேற, பிறகு மார்டின் கப்தில் ஒரே ஓவரில் அக்சர் படேல் (17), அமித் மிஸ்ரா (1) ஆகியோரை பெவிலியன் அனுப்ப இந்தியா 40.5 ஓவர்களில் 183/8 என்று தோல்வி முகம் கண்டது. ஆனால் அதன் பிறகு ஹர்திக் பாண்டியா 32 பந்துகளில் 36 ரன்களையும் உமேஷ் யாதவ் 18 ரன்களையும் எடுத்து இருவரும் 49 ரன்களை 8 ஓவர்களில் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். இந்நிலையில்தான் போல்ட் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை பாயிண்ட் அல்லது தேர்ட் மேன் தலைக்கு மேல் அடிக்க வேண்டிய ஹர்திக் பாண்டியா டென்னிஸ் ஷாட் போல் ஆடி கவரில் கேட்ச் கொடுத்து வெளியேற, கடைசி ஓவரில் சவுதி பந்தில் பும்ரா பவுல்டு ஆனார்.
Post a Comment
0 Comments