சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் ‘எஸ்3’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகி வரும் இப்படத்தில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தை தொடர்ந்து சூர்யா, ‘கொம்பன்’, ‘மருது’ ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இயக்கும் படமொன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில், தற்போது ‘போடா போடி’, ‘நானும் ரௌடிரதான்’ படத்தின் இயக்குனர் விக்னேஷ சிவன் இயக்கும் அடுத்த புதிய படத்திலும் நடிக்க சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் 2டி என்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் ஹீரோயினாக யார் நடிக்கிறார் என்பது குறித்து தகவல் இல்லை. அனேகமாக, நயன்தாராதான் இப்படத்தின் கதாநாயகியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்னேஷ் சிவன் ஏற்கெனவே ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற தலைப்பில் விஜய் சேதுபதியை வைத்து இயக்க திட்டமிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா
September 07, 2016
0
சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் ‘எஸ்3’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகி வரும் இப்படத்தில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தை தொடர்ந்து சூர்யா, ‘கொம்பன்’, ‘மருது’ ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இயக்கும் படமொன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில், தற்போது ‘போடா போடி’, ‘நானும் ரௌடிரதான்’ படத்தின் இயக்குனர் விக்னேஷ சிவன் இயக்கும் அடுத்த புதிய படத்திலும் நடிக்க சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் 2டி என்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் ஹீரோயினாக யார் நடிக்கிறார் என்பது குறித்து தகவல் இல்லை. அனேகமாக, நயன்தாராதான் இப்படத்தின் கதாநாயகியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்னேஷ் சிவன் ஏற்கெனவே ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற தலைப்பில் விஜய் சேதுபதியை வைத்து இயக்க திட்டமிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Tags
Post a Comment
0 Comments