தூக்கமின்மையால் இன்று பாதிக்கப்படுபவர்கள் பலர். ஆனால், ‘இதெல்லாம் ஒரு பிரச்னையா?’ என்று எண்ணி அதற்கு உரிய கவனம் கொடுத்து அவர்கள் சரிசெய்யாததால், உடல்நலக் குறைபாடுகள் பல அவர்களுக்கு ஏற்படும் .
முழுமையான தூக்கம் கிடைக்க..!
* டி.வி, செல்போன் பாத்துக்கொண்டே தூங்கும் பழக்கங்களுக்குத் தடைவிதித்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்தநாள் பற்றிய எந்த எண்ணமும் இல்லாமல், அமைதியான மனநிலையில் உறக்கத்துக்குள் செல்ல வேண்டும்.
* ‘அப்பாடா... படுத்துட்டோம்... இப்போ நல்லா நிம்மதியா தூங்குவோம்’ எனச் சொல்லி ஆனந்தமான தூக்கத்தை மனதில் கற்பனை செய்தபடி தூங்க வேண்டும்.
* வலி, கை கால் குடைச்சல் இருந்தால் உடனே அதனைச் சரிசெய்ய வேண்டும்.
* அளவான சாப்பாடு உட் கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் (8 மணிக்குப் பிறகு) காபி, டீ அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். மிக முக்கியமாக... சிகரெட் கூடவே கூடாது.
* எக்காரணம் கொண்டும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்தக் கூடாது.
* தினமும் குறைந்தது 30 நிமிடம் முறையான உடற்பயிற்சி/நடைப் பயிற்சி அவசியம்.
* நெருக்கம், இடம் பற்றாக்குறை என இல்லாமல் நல்ல காற்றோட்டமான, விசாலமான, முக்கியமாக விருப்பமான இடத்தில் உறங்க வேண்டும். நல்ல தூக்கத்துக்கான ஏற்பாடுகளை செய்துகொண்ட பின்னர் படுக்கைக்குச் செல்ல வேண்டும்.
* மறுநாள் விடுமுறை என்றால், முதல் நாள் இரவு 12 மணிவரை விழித்திருப்பது என்றில்லாமல், எப்போதுமே 6 முதல் 9 மணி நேரத் தூக்கத்தை, இரவு 9 முதல் காலை 6 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* தொலைதூரப் பயணத்தால் தூக்கம் தடைப்படும். இதை அடுத்த நாள் உடனடியாகச் சரிசெய்துகொள்ள வேண்டும்.
Post a Comment
0 Comments