Type Here to Get Search Results !

கிரிக்கெட் வீரராகி சுனாமியை 'ரிவெஞ்ச்' எடுத்த மீனவர்




வறுமையால் ஏழாம் வகுப்போடு அந்த சிறுவனின் பள்ளி படிப்பு நின்று போனது. எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்சத்தையும் சுனாமி பறித்தது. சுனாமியை 'ரிவெஞ்ச்' எடுக்க பெரிய ஆளாகிக் காட்ட வேண்டும் என்ற உறுதியோடு கிளம்புகிறான் அந்த சிறுவன்...  கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளம் என்ற கடலோர கிராமம். சிறுவன் அந்தோணி தாசுக்கு கிரிக்கெட் வீரராக வேண்டுமென்பது மட்டும்தான் கனவு. படிப்பு எல்லாம் அப்புறம்தான். ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது, கடலுக்கு சென்ற தாசின் தந்தை கட்டுமரம் கவிழ்ந்து விபத்தில் சிக்கினார். அவரால் தொடர்ந்து கடலுக்குள் சென்று மீன் பிடிக்க முடியாத நிலை. குடும்ப பாரம் சிறுவன் மீது விழுகிறது. அந்தேணி தாசுக்கு 5 சகோதரிகள். தனிஆளாக குடும்பத்தை காப்பற்ற வேண்டிய சூழல். பனிரெண்டு வயதிலேயே அந்தோணி தாஸ் கடலோடுகிறான்.  அரை வயிற்று கஞ்சியுடம் குடும்பம் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த 2004ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தை சுனாமி தாக்குகிறது. கடலோர கிராமங்கள் சின்னாப்பின்னமாகின. அந்தோணி தாஸ் குடும்பத்தினரே சுனாமியில் தப்பித்ததே பெரிய கதை. இருந்த கட்டுமரம் காணாமல் போனது. மீன்பிடி வலைகள் சிதைந்து போயின. வீட்டில் இருந்த பொருட்கள் தண்ணீரோடு போய் விட்டன. கீறல் விழுந்த சுவர்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது. பட்டக் காலிலேயே படும் என்பது போல, வாழ்க்கையே வெறுமையாகிப் போனது அந்தோணி தாசுக்கு.  ''தந்தையால் கடலுக்கு போக முடியாத சூழல். நான் ஒருவன்தான் சம்பாதிக்க வேண்டும். 5 சகோதரிகள். அவர்களை நல்ல இடத்தில் கல்யாணம் கட்டிக் கொடுக்க வேண்டும். சுனாமித் தாக்கிய போது எல்லாமே இழந்து விட்டோம். அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே ஒரு மாதம் பிடித்தது. வாழ்க்கையில் இதையெல்லாம் கடந்துதான் ஆக வேண்டும் என்ற எண்ணமும் எனக்குள் எழுந்தது. வாழ்க்கையில் பெரிய ஆளாகி காட்ட வேண்டுமென்ற என்ற விதையை எனக்குள் விதைத்தது சுனாமிதான். சுனாமியை ரிவெஞ்ச் எடுக்க கிரிக்கெட் விளையாட்டை தேர்வு செய்தேன் '' என்கிறார் அந்தோணி தாஸ்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad