இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மழை குறுக்கிட்டதை அடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறையில் இங்கிலாந்து 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்தின் செளதாம்டன் நகரில், புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அஸார் அலி, ஷர்ஜீல் கான் களமிறங்கினர். இதில் அஸார் அலி நிலைத்து ஆட, உடன் வந்த ஷர்ஜீல் 16 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து வந்த முகமது ஹஃபீஸ் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து பாபர் ஆஸம் களமிறங்க, அஸார் அலி 84 பந்துகளில் அரைசதம் கடந்தார். பாபர் ஆஸம் 40 ரன்களில் பெவிலியன் திரும்ப, அடுத்து சர்ஃபராஸ் அகமது களத்துக்கு வந்தார். இந்நிலையில், 82 ரன்கள் எடுத்து அஸார் அலி ஆட்டமிழந்தார். பின்னர் ஷோயிப் மாலிக் களத்துக்கு வந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைப்பட்டது. பின்னர் தொடங்கிய ஆட்டத்தில் சர்ஃபராஸ் 55 ரன்களிலும், ஷோயிப் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான். முகமது நவாஸ், இமத் வாஸிம் தலா 17 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில், ஆதில் ரஷித் 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து இங்கிலாந்து தனது இன்னிங்ûஸ தொடங்கியது. தொடக்க வீரர் ஜேசன் ராய் 65 ரன்களிலும், ஜோ ரூட் 61 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அலெக்ஸ் ஹேல்ஸ் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இயான் மோர்கன் 33 ரன், பென் ஸ்டோக்ஸ் 15 ரன்களுடன் களத்தில் இருந்தபோது மழையால் ஆட்டம் தடைப்பட்டது. மழை தொடர்ந்ததை அடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறையில் இங்கிலாந்து அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஜேசன் ராய் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது
பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து
August 26, 2016
0
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மழை குறுக்கிட்டதை அடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறையில் இங்கிலாந்து 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்தின் செளதாம்டன் நகரில், புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அஸார் அலி, ஷர்ஜீல் கான் களமிறங்கினர். இதில் அஸார் அலி நிலைத்து ஆட, உடன் வந்த ஷர்ஜீல் 16 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து வந்த முகமது ஹஃபீஸ் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து பாபர் ஆஸம் களமிறங்க, அஸார் அலி 84 பந்துகளில் அரைசதம் கடந்தார். பாபர் ஆஸம் 40 ரன்களில் பெவிலியன் திரும்ப, அடுத்து சர்ஃபராஸ் அகமது களத்துக்கு வந்தார். இந்நிலையில், 82 ரன்கள் எடுத்து அஸார் அலி ஆட்டமிழந்தார். பின்னர் ஷோயிப் மாலிக் களத்துக்கு வந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைப்பட்டது. பின்னர் தொடங்கிய ஆட்டத்தில் சர்ஃபராஸ் 55 ரன்களிலும், ஷோயிப் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான். முகமது நவாஸ், இமத் வாஸிம் தலா 17 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில், ஆதில் ரஷித் 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து இங்கிலாந்து தனது இன்னிங்ûஸ தொடங்கியது. தொடக்க வீரர் ஜேசன் ராய் 65 ரன்களிலும், ஜோ ரூட் 61 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அலெக்ஸ் ஹேல்ஸ் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இயான் மோர்கன் 33 ரன், பென் ஸ்டோக்ஸ் 15 ரன்களுடன் களத்தில் இருந்தபோது மழையால் ஆட்டம் தடைப்பட்டது. மழை தொடர்ந்ததை அடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறையில் இங்கிலாந்து அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஜேசன் ராய் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது
Tags
Post a Comment
0 Comments