2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவர் 60 கிலோ உடல் எடைப்பிரிவு ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் இந்திய வீரர் யோகேஷ்வர் தத் வென்ற வெண்கலப் பதக்கம், வெள்ளிப் பதக்கமாக உயர்த்தப்படுகிறது. காரணம், அந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற, 2013-ல் விபத்தில் மரணமடைந்த, ரஷ்ய வீரர் பெசிக் குடுகோவ் என்ற வீரர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை எடுத்துக் கொண்டதாக நிரூபணம் ஆனதால் அவரது வெள்ளிப் பதக்கம் பறிக்கப்படுகிறது. இதனையடுத்து இந்திய வீரர் யோகேஷ்வரின் வெண்கலப் பதக்கம் வெள்ளிப் பதக்கமாக உயர்த்தப்படுகிறது . அகால மரணமடைந்த ரஷ்ய வீரர் பெசிக் குடுகோவ், யோகேஷ்வரை லண்டன் ஒலிம்பிக்கில் வீழ்த்தினார். அவர் 4 முறை உலக சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவலை தங்களுக்கு உறுதி செய்ததாக கூறிய இந்திய மல்யுத்த கூட்டமைப்பு, இது குறித்த எழுத்துபூர்வ உறுதிக்காக காத்திருப்பதாக தெரிவித்தனர். இதன் மூலம் வெள்ளி வென்ற 2-வது இந்திய மல்யுத்த வீரரானார் யோகேஷ்வர் தத், ஏற்கெனவே சுஷில் குமார் வெள்ளி வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற 5-வது தனிநபர் வீரரானார் யோகேஷ்வர் தத். யோகேஷ்வர் பதக்க நிலை உயர்த்தப்பட்டதால், அமெரிக்க வீரர் கோல்மன் ஸ்காட் தற்போது 2012 மல்யுத்த வெண்கலப் பதக்க வீரராக உயர்வடைந்துள்ளார்.
2012 ஒலிம்பிக் மல்யுத்தம்: வெள்ளிப் பதக்கம் வென்றவர் ஆனார் யோகேஷ்வர்
August 31, 2016
0
2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவர் 60 கிலோ உடல் எடைப்பிரிவு ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் இந்திய வீரர் யோகேஷ்வர் தத் வென்ற வெண்கலப் பதக்கம், வெள்ளிப் பதக்கமாக உயர்த்தப்படுகிறது. காரணம், அந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற, 2013-ல் விபத்தில் மரணமடைந்த, ரஷ்ய வீரர் பெசிக் குடுகோவ் என்ற வீரர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை எடுத்துக் கொண்டதாக நிரூபணம் ஆனதால் அவரது வெள்ளிப் பதக்கம் பறிக்கப்படுகிறது. இதனையடுத்து இந்திய வீரர் யோகேஷ்வரின் வெண்கலப் பதக்கம் வெள்ளிப் பதக்கமாக உயர்த்தப்படுகிறது . அகால மரணமடைந்த ரஷ்ய வீரர் பெசிக் குடுகோவ், யோகேஷ்வரை லண்டன் ஒலிம்பிக்கில் வீழ்த்தினார். அவர் 4 முறை உலக சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவலை தங்களுக்கு உறுதி செய்ததாக கூறிய இந்திய மல்யுத்த கூட்டமைப்பு, இது குறித்த எழுத்துபூர்வ உறுதிக்காக காத்திருப்பதாக தெரிவித்தனர். இதன் மூலம் வெள்ளி வென்ற 2-வது இந்திய மல்யுத்த வீரரானார் யோகேஷ்வர் தத், ஏற்கெனவே சுஷில் குமார் வெள்ளி வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற 5-வது தனிநபர் வீரரானார் யோகேஷ்வர் தத். யோகேஷ்வர் பதக்க நிலை உயர்த்தப்பட்டதால், அமெரிக்க வீரர் கோல்மன் ஸ்காட் தற்போது 2012 மல்யுத்த வெண்கலப் பதக்க வீரராக உயர்வடைந்துள்ளார்.
Tags
Post a Comment
0 Comments