ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் படம் இருமுகன். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மலேசியா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. ஷிபு தமீன்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனது முந்தைய படமான பத்து எண்றதுக்குள்ள தோல்வியடைந்ததால், படத்தில் மட்டுமல்ல இந்தப்படத்தின் புரமோஷனில் தீவிரம் காட்ட விரும்புகிறார் விக்ரம். குறிப்பாக கேரளாவில் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியை தடபுடலாக நடத்த முடிவு செய்துள்ளார் விக்ரம்.. காரணம் தான் தமிழில் புறக்கணிக்கப்பட்ட காலங்களில் தனக்கு வாய்ப்பு கொடுத்து வாழவைத்த, ஐ படம் மூலம் கேரளாவில் தனக்கு மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் கொடுத்த கேரளாவை மிக முக்கியமாக கருதுகிறார் விக்ரம். தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ்க்கு மட்டுமல்ல, இந்தப்படத்தின் நாயகி நயன்தாராவுக்கு சொந்த ஊர் கேரளா தான்.. ஆனால் தமிழ், மலையாளம் என எந்த மொழிகளில் நடித்தாலும் அந்தப்படத்தின் புரமோஷன்களில் நயன்தாரா கலந்துகொள்ள மாட்டார். இந்நிலையில் இந்த மாத இறுதியில் நடத்தப்பட உள்ள இருமுகன் ஆடியோ விழாவில் கலந்துகொள்ளாவிட்டாலும் கூட, அவரது சொந்த ஊரான கேரளாவில் நடக்கும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம் வருவார்.. நயன்தாரா வருவாரா..
July 11, 2016
0
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் படம் இருமுகன். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மலேசியா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. ஷிபு தமீன்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனது முந்தைய படமான பத்து எண்றதுக்குள்ள தோல்வியடைந்ததால், படத்தில் மட்டுமல்ல இந்தப்படத்தின் புரமோஷனில் தீவிரம் காட்ட விரும்புகிறார் விக்ரம். குறிப்பாக கேரளாவில் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியை தடபுடலாக நடத்த முடிவு செய்துள்ளார் விக்ரம்.. காரணம் தான் தமிழில் புறக்கணிக்கப்பட்ட காலங்களில் தனக்கு வாய்ப்பு கொடுத்து வாழவைத்த, ஐ படம் மூலம் கேரளாவில் தனக்கு மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் கொடுத்த கேரளாவை மிக முக்கியமாக கருதுகிறார் விக்ரம். தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ்க்கு மட்டுமல்ல, இந்தப்படத்தின் நாயகி நயன்தாராவுக்கு சொந்த ஊர் கேரளா தான்.. ஆனால் தமிழ், மலையாளம் என எந்த மொழிகளில் நடித்தாலும் அந்தப்படத்தின் புரமோஷன்களில் நயன்தாரா கலந்துகொள்ள மாட்டார். இந்நிலையில் இந்த மாத இறுதியில் நடத்தப்பட உள்ள இருமுகன் ஆடியோ விழாவில் கலந்துகொள்ளாவிட்டாலும் கூட, அவரது சொந்த ஊரான கேரளாவில் நடக்கும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags
Post a Comment
0 Comments