Type Here to Get Search Results !

பாடிக்கொண்டே பந்தை சிக்சர் அடிக்கும் சேவாக்



களத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே, பந்தை அடிக்கும் யுக்தியை வகுக்கும் அணுகுமுறை மூலம் அறியப்பட்டவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க அதிரடி ஆட்டகாரர் வீரேந்திர ஷேவாக்.  தற்போது அவரின் புதிய அணுகுமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அது பாடிக்கொண்டே பந்தை சிக்சர் அடிப்பதாகும். ஷேவாக் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார் என்பது உலகறிந்ததே.  எனினும் கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடும் ஒரு புதிய தொடர் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இந்திய முன்னாள் வீரர் ஷேவாக், சச்சின் அணியில் இடம்பிடித்து விளையாடினார்.  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஷேன் வார்னே அணிக்கும், சச்சின் அணிக்கும் இடையே நடந்த ஒரு போட்டியின் போது ஷேவாக்கின் புதிய அணுகுமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  ஆட்டத்தின் போது சச்சின் அணியின் தொடக்க ஆட்டகாரராக ஷேவாக் களமிறங்கிய விளையாடினார். களத்தில் ஷேவாக் விளையாடி கொண்டிருக்கும் போது வர்ணனையாளர்களுடன் தொடர்பிலிருந்து பேசிக்கொண்டிருந்தார்.  அப்போது, ஷேவாக் பாட்டு பாடிக்கொண்டே டொனால்ட் வீசிய பந்தை சிக்சர் அடித்தது வெளிச்சத்திற்கு வந்ததுள்ளது வர்ணனையாளர்களிடம் பேச அவருக்கு பொறுத்தப்பட்டிருந்த மைக்கில் அவரின் பாட்டு அனைவருக்கும் கேட்டது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad