Type Here to Get Search Results !

விஷாலுக்கு வந்த புதிய எதிர்ப்பு





தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக பரபரப்பிலேயே இருப்பவர். நடிகர் சங்கத் தேர்தல், திருட்டு விசிடி என பல சர்ச்சைகளுடன் வலம் வருபவர்.இவர் சமீபத்தில் நடந்த விலங்குகள் நல அமைப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது Face of Animal Activism 2015 என்ற விருது கவர்னர் கையால் வழங்கப்பட்டது. அந்தவிழாவில் பேசுகையில் ஜல்லிக்கட்டு தடைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.இதனால் விஷாலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நடந்த தேர்தலில் கூட பல கட்சிகளும் ஜல்லிக்கட்டு தடையை நீக்குவதாக கூறி வாக்குறுதிகள் தந்திருந்தன. இந்நிலையில் விஷாலின் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவிக்காவிட்டால் அவரது படத்தை ரிலிஸ் செய்யவிடாமல் போராட்டம் நடத்துவோம் என்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad