Type Here to Get Search Results !

ரஜினி படத்துக்கு உதவி செய்த கமல்





சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படங்களில் இப்போதும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது  முள்ளும் மலரும் ரஜினிக்கு பிடித்த படமும் அதுதான், பிடித்த இயக்குனரும் முள்ளும் மலரும் இயக்கிய மகேந்திரன் தான். இது மகேந்திரனுக்கு முதல் படம். திரைக்கதை வசனகர்த்தாவாக இருந்த மகேந்திரன் தயாரிப்பாளர் வேணு செட்டியாரிடம் முள்ளும் மலரும் கதையை சொன்னார். சண்டை காட்சி இல்லை. பாடல்கள் காட்சிகளும் சிம்பிளாக இருக்கிறது அதனால் அதிக செலவு பிடிக்காது என்று ஓகே சொல்லிவிட்டார் வேணு செட்டியார். ஆனால் படத்தை மகேந்திரன் பார்த்து பார்த்து செதுக்கியதில் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க முடியவில்லை. ஒரு நாளைக்கு ஒரு காட்சி எடுப்பதே பெரிய விஷயமாக இருந்தது. இதனால் திட்டமிட்டதை விட படப்பிடிப்பு நாட்கள் அதிகமானதால் பட்ஜெட்டும் அதிகமானது. வேணு செட்டியார் எடுத்த வரைக்கும் போதும் என்று படத்தை போட்டு பார்த்து அதிர்ச்சி அடைந்தார். படத்தில் வசனங்கள் குறைவாக இருக்கிறது. ஹீரோவுக்கு சண்டை காட்சி இல்லை. கையை  வேறு வெட்டிவிட்டார்கள். இந்தப் படம் எப்படி ஓடும் என்று தவித்தார். அப்போது படத்தின் சூப்பர் ஹிட் பாடலான “செந்தாளம் பூவில் வந்தாடும் தென்றல்...” பாடலும் அதையொட்டி சில காட்சிகளும் படமாக்கப்பட வேண்டியது இருந்தது. தயாரிப்பாளர் வேணு செட்டியர் அந்த பாடலும் காட்சிகளும் இல்லாமே படத்தை வெளியிட தயாராகிவிட்டார். அதிர்ச்சி அடைந்த மகேந்திரன் கமல்ஹாசனிடம் தன் வேதனையை சொல்லியிருக்கிறார். உடனே கமல் “எந்த காரணத்தை கொண்டும் என் நண்பன் ரஜினி படம் நிற்க கூடாது” என்று அந்த பாடலையும், காட்சியையும் படமாக்கும் செலவை  நான் தருகிறேன் என்று ஏற்றுக் கொண்டார். கமல் செலவில் பாடலும் காட்சியும் எடுக்கப்பட்டு அதன் பிறகு வெளிவந்தது. முதல் இரண்டு நாள் காத்து வாங்கிய படம் பிறகு சாதனை படைத்தது. இளையராஜாவின், இசை, பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு, மகேந்திரனின் இயக்கம்  இவற்றோடு கமலின் உதவியும் சேர்ந்ததால்தான் தமிழ் சினிமாவின் மகத்தான பொக்கிஷங்களில் ஒன்றான  முள்ளும் மலரும் வெளிவந்தது



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad