"இந்திய அணிக்கு என்னால் இயன்ற அனைத்தையும் செய்துவிட்டேன். அடுத்தகட்ட முடிவெடுப்பதற்கு இதுவே சரியான நேரம் என கருதுகிறேன்' என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இயக்குநர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "எனக்குத் தெரிந்த வரையில், இந்திய அணியில் எனது பங்கு நிறைவடைந்துவிட்டது. அடுத்தகட்ட முடிவு எடுப்பதற்கு இதுவே சரியான தருணம் என்று நம்புகிறேன். இதுதொடர்பாக கூறுவதற்கு வேறு எதுவும் இல்லை' என்றார். முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு ரவி சாஸ்திரியும் விண்ணப்பித்திருந்த நிலையில், முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தேர்வு செய்யப்பட்டார். பயிற்சியாளர் பொறுப்புக்கான நேர்காணலை மேற்கொண்ட குழுவினரில் கங்குலியும் ஒருவர். எனினும், ரவி சாஸ்திரியை நேர்காணல் செய்தபோது கங்குலி அதில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்டதற்கு, "கங்குலி தனது பதவியை மதித்து நடக்க வேண்டும். அவரைப் பற்றி கூறுவதற்கு எதுவும் இல்லை. ஏற்கெனவே இதுதொடர்பாக அதிகம் கூறிவிட்டேன்' என்றார். எனினும், கங்குலி-ரவி சாஸ்திரி இடையே பனிப்போர் நிலவுவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்திய அணியில் தகுந்த முறையில் மாற்றம் கொண்டு வந்ததற்காக தனக்கு உரிய கெளரவத்தை, ஒரு வர்ணனையாளர் என்ற முறையில் ரவி சாஸ்திரி அளிக்கவில்லை என்று கங்குலி எப்போதும் எண்ணினார். அதேபோல், தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்துள்ள தனது திறமையை கங்குலி குறைத்து மதிப்பிடுவதாக ரவி சாஸ்திரி நினைத்துள்ளார். எது எப்படியிருந்தாலும், ரவி சாஸ்திரியுடனான நேர்க்காணலின்போது கங்குலி அங்கு இருந்திருக்க வேண்டும்' என்று அந்த அதிகாரி கூறினார்.
அடுத்தகட்ட முடிவுக்கு இதுவே சரியான நேரம் ரவி சாஸ்திரி
June 29, 2016
0
"இந்திய அணிக்கு என்னால் இயன்ற அனைத்தையும் செய்துவிட்டேன். அடுத்தகட்ட முடிவெடுப்பதற்கு இதுவே சரியான நேரம் என கருதுகிறேன்' என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இயக்குநர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "எனக்குத் தெரிந்த வரையில், இந்திய அணியில் எனது பங்கு நிறைவடைந்துவிட்டது. அடுத்தகட்ட முடிவு எடுப்பதற்கு இதுவே சரியான தருணம் என்று நம்புகிறேன். இதுதொடர்பாக கூறுவதற்கு வேறு எதுவும் இல்லை' என்றார். முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு ரவி சாஸ்திரியும் விண்ணப்பித்திருந்த நிலையில், முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தேர்வு செய்யப்பட்டார். பயிற்சியாளர் பொறுப்புக்கான நேர்காணலை மேற்கொண்ட குழுவினரில் கங்குலியும் ஒருவர். எனினும், ரவி சாஸ்திரியை நேர்காணல் செய்தபோது கங்குலி அதில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்டதற்கு, "கங்குலி தனது பதவியை மதித்து நடக்க வேண்டும். அவரைப் பற்றி கூறுவதற்கு எதுவும் இல்லை. ஏற்கெனவே இதுதொடர்பாக அதிகம் கூறிவிட்டேன்' என்றார். எனினும், கங்குலி-ரவி சாஸ்திரி இடையே பனிப்போர் நிலவுவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்திய அணியில் தகுந்த முறையில் மாற்றம் கொண்டு வந்ததற்காக தனக்கு உரிய கெளரவத்தை, ஒரு வர்ணனையாளர் என்ற முறையில் ரவி சாஸ்திரி அளிக்கவில்லை என்று கங்குலி எப்போதும் எண்ணினார். அதேபோல், தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்துள்ள தனது திறமையை கங்குலி குறைத்து மதிப்பிடுவதாக ரவி சாஸ்திரி நினைத்துள்ளார். எது எப்படியிருந்தாலும், ரவி சாஸ்திரியுடனான நேர்க்காணலின்போது கங்குலி அங்கு இருந்திருக்க வேண்டும்' என்று அந்த அதிகாரி கூறினார்.
Tags
Post a Comment
0 Comments