ஏஐபி-யின் காமெடி குழுவைச் சார்ந்த தன்மயி பட் சமீபத்தில் பிரபல பாடகி லதா மங்கேஷ்கரையும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரையும் கேலி செய்யும் விதமாக வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீடியோவை தடை செய்ய சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக மும்பை பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் இணையத்தில் வீடியோவை தடை செய்ய கூகுள் மற்றும் யூடியூப்பை தொடர்பு கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக அரசு, தன்மயி பட் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. அந்த வீடியோவை ஸ்னாப்சாட்டில் உள்ள பேஸ் ஸ்வேப் (face swap) வசதியை கொண்டு தன்மயி பட் ஏற்படுத்தியுள்ளார். அதில் சச்சின் டெண்டுல்கரும் லதா மங்கேஷ்கரும், சச்சின் சிறந்த கிரிக்கெட் வீரரா அல்லது விராட் கோலி சிறந்த கிரிக்கெட் வீரரா என ஆக்ரோஷமாக விவாதம் செய்வது போன்று இடம்பெற்றுள்ளது. அதில், நாகரிகமற்ற முறையில் சச்சினையும், லதா மங்கேஷ்கரையும் இழிவுபடுத்தியுள்ளதாக பலரும் டுவிட்டரில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ள அஞ்சலி டெண்டுல்கர், காமெடியாளர்கள் தாங்கள் செய்ய நகைச்சுவைக்கும் பிறரை இழிவுபடுத்துவதற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
சச்சின்- லதா மங்கேஷ்கரை இழிவுபடுத்தும் வீடியோ: தக்க பதிலடி கொடுத்த அஞ்சலி
May 31, 2016
0
ஏஐபி-யின் காமெடி குழுவைச் சார்ந்த தன்மயி பட் சமீபத்தில் பிரபல பாடகி லதா மங்கேஷ்கரையும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரையும் கேலி செய்யும் விதமாக வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீடியோவை தடை செய்ய சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக மும்பை பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் இணையத்தில் வீடியோவை தடை செய்ய கூகுள் மற்றும் யூடியூப்பை தொடர்பு கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக அரசு, தன்மயி பட் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. அந்த வீடியோவை ஸ்னாப்சாட்டில் உள்ள பேஸ் ஸ்வேப் (face swap) வசதியை கொண்டு தன்மயி பட் ஏற்படுத்தியுள்ளார். அதில் சச்சின் டெண்டுல்கரும் லதா மங்கேஷ்கரும், சச்சின் சிறந்த கிரிக்கெட் வீரரா அல்லது விராட் கோலி சிறந்த கிரிக்கெட் வீரரா என ஆக்ரோஷமாக விவாதம் செய்வது போன்று இடம்பெற்றுள்ளது. அதில், நாகரிகமற்ற முறையில் சச்சினையும், லதா மங்கேஷ்கரையும் இழிவுபடுத்தியுள்ளதாக பலரும் டுவிட்டரில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ள அஞ்சலி டெண்டுல்கர், காமெடியாளர்கள் தாங்கள் செய்ய நகைச்சுவைக்கும் பிறரை இழிவுபடுத்துவதற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
Tags
Post a Comment
0 Comments