ஒரு காலத்தில் வெள்ளிவிழா நாயகனாக திகழ்ந்தவர் மோகன். பயணங்கள் முடிவதில்லை, உதயகீதம், இதய கோயில், நெஞ்சத்தை கிள்ளாதே என தொடர் வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர். மோகன் மைக் பிடித்து பாடிவிட்டால் அந்தபடம் வெள்ளிவிழா கொண்டாடும் என்பது அப்போதைய செண்டிமெண்ட். அதனால் அவர் மைக் மோகன் என்றும் அழைக்கப்பட்டார். அடுத்த தலைமுறை சினிமாவுக்குள் நுழைந்ததும். சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டார் மோகன்.இப்போதும் அதே இளமையான தோற்றத்துடன் வலம் வருகிறார். உலக சினிமா பட விழாக்கள், நடிகர் சங்க பணிகள் ஆகியவற்றில் முதல் ஆளாக நிற்கிறார். ஆனால் சினிமாவில் மட்டும் நடிக்க மறுத்து வந்தார். காரணம் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்பது அவரது பாலிசி. தனி ஒருவன் படத்தில் ஜெயம்ராஜா முதலில் வில்லனாக நடிக்க கேட்டது மோகனைத்தான். அவர் மறுக்கவே அரவிந்த்சாமி நடித்தார். படத்தின் வெற்றியும், அரவிந்த்சாமியின் ரீ -என்ட்ரியும் மோகனை சிந்திக்க வைத்திருக்கிறது. மீண்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறார். வில்லன் கேரக்டர் அல்லது கதைக்கு முக்கியத்தும் வாய்ந்த கேரக்டரில் நடிக்க முடிவு செய்து கதை கேட்டு வருகிறார். விரையில் மோகன் ரீ எண்ட்ரியாகும் படத்தின் அறிவிப்பு வெளிவர இருக்கிறது.
மீண்டும் வருகிறார் வெள்ளி விழா நாயகன் மோகன்
April 12, 2016
0
ஒரு காலத்தில் வெள்ளிவிழா நாயகனாக திகழ்ந்தவர் மோகன். பயணங்கள் முடிவதில்லை, உதயகீதம், இதய கோயில், நெஞ்சத்தை கிள்ளாதே என தொடர் வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர். மோகன் மைக் பிடித்து பாடிவிட்டால் அந்தபடம் வெள்ளிவிழா கொண்டாடும் என்பது அப்போதைய செண்டிமெண்ட். அதனால் அவர் மைக் மோகன் என்றும் அழைக்கப்பட்டார். அடுத்த தலைமுறை சினிமாவுக்குள் நுழைந்ததும். சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டார் மோகன்.இப்போதும் அதே இளமையான தோற்றத்துடன் வலம் வருகிறார். உலக சினிமா பட விழாக்கள், நடிகர் சங்க பணிகள் ஆகியவற்றில் முதல் ஆளாக நிற்கிறார். ஆனால் சினிமாவில் மட்டும் நடிக்க மறுத்து வந்தார். காரணம் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்பது அவரது பாலிசி. தனி ஒருவன் படத்தில் ஜெயம்ராஜா முதலில் வில்லனாக நடிக்க கேட்டது மோகனைத்தான். அவர் மறுக்கவே அரவிந்த்சாமி நடித்தார். படத்தின் வெற்றியும், அரவிந்த்சாமியின் ரீ -என்ட்ரியும் மோகனை சிந்திக்க வைத்திருக்கிறது. மீண்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறார். வில்லன் கேரக்டர் அல்லது கதைக்கு முக்கியத்தும் வாய்ந்த கேரக்டரில் நடிக்க முடிவு செய்து கதை கேட்டு வருகிறார். விரையில் மோகன் ரீ எண்ட்ரியாகும் படத்தின் அறிவிப்பு வெளிவர இருக்கிறது.
Tags
Post a Comment
0 Comments