Type Here to Get Search Results !

உலக சாதனையை சமன் செய்த இந்திய வீராங்கனை



இந்தியா வில்வித்தை வினையாட்டு வீராங்கனை தீபிகா குமாரி, உலக சாதனையை சமன் செய்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.  சீனாவின் ஷாங்காய் நடைபெற்று வரும் வில்வித்தை உலக கோப்பைத் தொடாின் தகுதிச்சுற்றில் பங்கேற்று விளையாடிய 21 வயதான தீபகா குமாரி, மொத்தம் 720 புள்ளிகளுக்கு 686 புள்ளிகள் பெற்றார்.  இதன் மூலம், கடந்த ஆண்டு குவங்ஜு உலக பல்கலைக்கழகம் விளையாட்டுப் போட்டிகளின் போது தென் கொாியா வீராங்கனைகி போ பே நிகழ்த்திய உலக சாதனையை சமன் செய்துள்ளார்.  போட்டியின் இடைவெளியின்போது, உலக சாதனை முறியடிக்க தீபிகா குமாரிக்கு 343 புள்ளிகள் தேவைப்பட்டிருந்தது,  ஆனால், போட்டியின்முடிவில் தீபிகா குமாரி 342 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்து இந்தியாவிற்கு பெருமை சோ்த்துள்ளார்.  கடந்த 2014 ஆம்ஆண்டு போலந்து நாட்டில் நடந்த உலக கோப்பை வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி தமைமையிலான இந்தியா பெண்கள் வில்வித்தை அணி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad