நடிகர் சங்க கிரிக்கெட் போட்டி குறித்து இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. இதில் நாசர், விஷால், பொண்வன்னன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.இதில் நீண்ட நாட்களாக விஷால்-அஜித் குறித்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் பேசிய விஷால் ‘அஜித்திற்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.அவரை சார் என்று மரியாதையுடன் கூப்பிட சொல்கிறார்கள், நான் எல்லோர் மேலும் தனிப்பட்ட முறையில் மரியாதை வைத்துள்ளேன், யார் மீதும் கோவப்பட மாட்டேன்.அதுமட்டுமின்றி எனக்கு அஜித், விஜய், ரஜினி, கமல் எல்லோர் மீதும் மரியாதை உள்ளது. நான் அஜித்தை மதிப்பவன், எனக்கும் அவருக்கும் எப்போதும் பிரச்சனை இருந்தது இல்லை’ என்று கூறியுள்ளார்.இதை தொடர்ந்து பொண்வன்னன் பேசுகையில் ‘அஜித்தை எனக்கு பல வருடங்களாக தெரியும், அவர் 7 வருடமாக எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்ளவில்லை, அவர் என்னிடமே பல விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார், எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை’ என கூறினார்.
அஜித் குறித்த சர்ச்சைக்கு பதில் அளித்த விஷால்
April 28, 2016
0
நடிகர் சங்க கிரிக்கெட் போட்டி குறித்து இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. இதில் நாசர், விஷால், பொண்வன்னன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.இதில் நீண்ட நாட்களாக விஷால்-அஜித் குறித்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் பேசிய விஷால் ‘அஜித்திற்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.அவரை சார் என்று மரியாதையுடன் கூப்பிட சொல்கிறார்கள், நான் எல்லோர் மேலும் தனிப்பட்ட முறையில் மரியாதை வைத்துள்ளேன், யார் மீதும் கோவப்பட மாட்டேன்.அதுமட்டுமின்றி எனக்கு அஜித், விஜய், ரஜினி, கமல் எல்லோர் மீதும் மரியாதை உள்ளது. நான் அஜித்தை மதிப்பவன், எனக்கும் அவருக்கும் எப்போதும் பிரச்சனை இருந்தது இல்லை’ என்று கூறியுள்ளார்.இதை தொடர்ந்து பொண்வன்னன் பேசுகையில் ‘அஜித்தை எனக்கு பல வருடங்களாக தெரியும், அவர் 7 வருடமாக எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்ளவில்லை, அவர் என்னிடமே பல விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார், எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை’ என கூறினார்.
Tags
Post a Comment
0 Comments