இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் போது ருசிகர தகவல் ஒன்றை கூறியுள்ளார். கிரிக்கெட்டில் உச்சத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கர் தற்போது கோடீஸ்வராக திகழ்கிறார். ஆனால் அவர் இத்தகைய நிலையை அடைவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்நிலையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சச்சின் டெண்டுல்கர் தனது கடந்த கால நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், "நான் மும்பையின் 15 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம்பிடித்த போது எனக்கு சரியாக 12 வயதானது. நாங்கள் புனேவிற்கு சென்று விளையாடினோம். அந்தப் போட்டியில் நான் 4 ஓட்டங்களில் ரன் அவுட் ஆனேன். இதனால் கடும் ஏமாற்றத்துடன் ஓய்வறைக்குத் திரும்பிய நான் அழத் தொடங்கினேன். இருப்பினும் அந்தப் போட்டி மழை பெய்ததால் முழுதாக நடக்கவில்லை. எனவே நாங்கள் திரையரங்கு, பூங்கா என்று சுற்றியலைந்து செலவு செய்தோம். நானும் கணக்கு பார்க்காமல் செலவு செய்துவிட்டேன். இந்நிலையில் மும்பைக்கு ரயிலில் திரும்பிய என்னிடம் பாக்கெட்டில் பணமே இல்லை. இரண்டு பெரிய பைகளை நான் சுமந்திருந்தேன். இதனால் தாதர் ரயில் நிலையத்திலிருந்து சிவாஜி பார்க்கிற்கு நடந்து தான் செல்ல வேண்டிய நிலை. ஏனெனில் என்னிடம் காசு இல்லை. அந்த வயதில் எப்படி செலவு செய்வது என்று எனக்கு தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.
கையில் காசு இல்லாமல் தவித்தேன் சச்சின்
April 27, 2016
0
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் போது ருசிகர தகவல் ஒன்றை கூறியுள்ளார். கிரிக்கெட்டில் உச்சத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கர் தற்போது கோடீஸ்வராக திகழ்கிறார். ஆனால் அவர் இத்தகைய நிலையை அடைவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்நிலையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சச்சின் டெண்டுல்கர் தனது கடந்த கால நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், "நான் மும்பையின் 15 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம்பிடித்த போது எனக்கு சரியாக 12 வயதானது. நாங்கள் புனேவிற்கு சென்று விளையாடினோம். அந்தப் போட்டியில் நான் 4 ஓட்டங்களில் ரன் அவுட் ஆனேன். இதனால் கடும் ஏமாற்றத்துடன் ஓய்வறைக்குத் திரும்பிய நான் அழத் தொடங்கினேன். இருப்பினும் அந்தப் போட்டி மழை பெய்ததால் முழுதாக நடக்கவில்லை. எனவே நாங்கள் திரையரங்கு, பூங்கா என்று சுற்றியலைந்து செலவு செய்தோம். நானும் கணக்கு பார்க்காமல் செலவு செய்துவிட்டேன். இந்நிலையில் மும்பைக்கு ரயிலில் திரும்பிய என்னிடம் பாக்கெட்டில் பணமே இல்லை. இரண்டு பெரிய பைகளை நான் சுமந்திருந்தேன். இதனால் தாதர் ரயில் நிலையத்திலிருந்து சிவாஜி பார்க்கிற்கு நடந்து தான் செல்ல வேண்டிய நிலை. ஏனெனில் என்னிடம் காசு இல்லை. அந்த வயதில் எப்படி செலவு செய்வது என்று எனக்கு தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.
Tags
Post a Comment
0 Comments