Type Here to Get Search Results !

ஜாலியாக பேசிக் கொண்ட கோஹ்லி- மேக்ஸ்வெல்




இந்திய கிரிக்கெட் உலகின் சூப்பர் ஹீரோவான வீராட் கோஹ்லி, ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல்லுடன் ஜாலியாக உரையாடினார். அப்போது இந்திய அணியின் செயல்பாடு, கோஹ்லி – ஃபால்க்னர் உரையாடல், சச்சின், ஐ.பி.எல் என மேக்ஸ்வெல் கேட்ட கேள்விகளுக்கு கோஹ்லி பதிலளித்தார்.  விளையாட்டு போட்டிகளின் போது கோஹ்லியின் ஆக்ரோஷம் பற்றிய கேள்விக்கு, அந்த குணம் என் குடும்பத்திலேயே இருக்கிறது. என் தந்தை சிம்மராசிக்காரர். அவரும் அப்படித்தான்.  அதுமட்டுமின்றி டெல்லி கிரிக்கெட்டில் போராடித்தான் முன்னேற வேண்டும். அந்தப் போராட்ட குணமே இதற்குக் காரணம் என்று பதிலளித்தார்.  ஜேம்ஸ் ஃபால்க்னருடன் தாம் பேசிக் கொண்டது குறித்து, நாங்கள் வேடிக்கையாக பேசிக் கொண்டோம், அநாகரிகமாகவோ, அசிங்கமாகவோ பேசவில்லை.  கடைசி போட்டியில் அவர் தான் கைகொடுத்து என்னை தூக்கிவிட்டார் என்று தெரிவித்தார்.  மேலும் தன்னுடைய வளர்ச்சிக்கு ஜாம்பவான் சச்சின் மிகப்பெரிய பங்காற்றினார் என்றும், அவருடன் விளையாடிய நாட்களை மறக்க முடியாது எனவும் தெரிவித்தார்.  இறுதியில் தன்னுடைய பொழுதுபோக்குகளையும், தனக்கு பிடித்த விஷயங்களையும் கூலாக பகிர்ந்து கொண்டார் கோஹ்லி.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad