Type Here to Get Search Results !

இந்திய அணியின் படுதோல்விக்கு காரணம் என்ன



இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணித்தலைவர் தோனி கருத்து தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் டி20 போட்டி நேற்று புனேயில் நடைபெற்றது.  பந்துவீச்சில் மிரட்டிய இலங்கை அணி இந்தியாவை 101 ரன்களில் சுருட்டியது. இதனால் 5 விக்கெட்டுகளால் அந்த அணி எளிதில் வெற்றி பெற்றது.  இந்த தோல்வி குறித்து இந்திய அணித்தலைவர் தோனி கூறுகையில், ”இந்த ஆடுகளம் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. சொல்லப் போனால் இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்கள் போல புற்கள் நிறைந்து காணப்பட்டது.  இதுபோன்ற ஆடுகளங்களில் சிறப்பான ஷாட்டுகளை ஆடி இருக்க வேண்டும். 130 முதல் 135 ரன்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்று கூறியுள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad