Type Here to Get Search Results !

திசாரா பெரேரா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்



இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் திசாரா பெரேரா. டெஸ்ட் போட்டியில் அதிக அளவில் இடம்பெறாவிடிலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.  இவர் தற்போது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இத்தகவலை இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  26 வயதாகும் திசாரா பேரேரா கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதி கார்டிப் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுகம் ஆனார். இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் 203 ரன்கள் சேர்த்துள்ள அவர் 11 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார். இலங்கை  அணி மே மாதம் இங்கிலாந்து செல்கிறது. இந்நிலையில் பெரேரா இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளார்.  டெஸ்டில் கடைசியாக 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்றிருந்தார். அதன்பின் சுமார் நான்கு வருடங்கள் டெஸ்டில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் தற்போதுவரை 110 ஒருநாள் மற்றும் 42 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad