Type Here to Get Search Results !

சென்னை-28 இரண்டாம் பாகம்



சினிமாவில் யாரும் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு முன்னணி இயக்குநராக மளமளவென உயர்ந்தார் வெங்கட்பிரபு. அவர் இயக்கிய முதல் படமான சென்னை 28 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெங்கட் பிரபுவுக்கு திரையுலகில் மவுசு ஏற்பட்டது. அதை அதிகாலம் அவரால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி போன்ற வெங்கட்பிரபுவின் சமீபத்திய படங்கள் மிகப்பெரிய தோல்வியடைந்தன. குறிப்பாக மாசு என்கிற மாசிலாமணி படம் அப்படத்தின் ஹீரோவான சூர்யாவின் கேரியரையே அசைத்துப்பார்த்தது. எனவே வெங்கட்பிரபுவுக்கு அட்வான்ஸ் கொடுத்த முன்னணி தயாரிப்பாளர்கள் அவரிடமிருந்து அட்வான்ஸை திரும்ப வாங்கிவிட்டனர். அப்படி வாங்கியவர்களில் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனும் ஒருவர். எனவே அப்செட்டாகி இருந்த வெங்கட்பிரபு தன்னுடைய இயக்கத்தில் வெற்றி பெற்ற சென்னை 28 படத்தின் 2ம் பாகம் படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார்.அந்தப் படம் எப்போது தொடங்கப்படும் என்று தற்போது  விளக்கம் அளித்திருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு. "சென்னை 28 படத்தில் நடித்த அனைவரையும் ஒன்றிணைத்து இரண்டாம் பாகம் தொடங்கலாம் என திட்டமிட்டுள்ளோம். ஆனால் அனைத்தும் இப்போதைக்கு எண்ணங்களாக மட்டுமே இருக்கின்றன. ஆனால் கண்டிப்பாக நடக்கும்" என்று தெரிவித்துள்ள வெங்கட்பிரபு தன்னுடைய படம் குறித்து மற்றுமொரு தகவலையும் தெரிவித்திருக்கிறார். சென்னை 28 2ம் பாகம் இயக்குநர் கெளதம் மேனனுடன் இணைந்து தயாரிக்க இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி தவாறனது. நானும் இயக்குநர் கெளதம் மேனனும் இணைந்து பணியாற்ற இருப்பது உண்மைதான். ஆனால் அது வேறொரு படம். சென்னை 28 2ம் பாகம் அல்ல" என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad