Type Here to Get Search Results !

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ராஜினாமா



பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அசார் அலி ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷஹார்யர் கான் கேட்டுக் கொண்டதால் அப்பதவியில் நீடிக்க அவர் ஒப்புக்கொண்டார்.  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் ஆடவுள்ளது. இதற்காக அந்த அணியினர் தற்போது பயிற்சி பெற்று வருகிறார்கள். சூதாட்ட புகார் காரணமாக 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்த வேகப் பந்து வீச்சாளர் முகமது ஆமிர் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்கிறார். இதற்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் அசார் அலி நேற்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷஹார்யர் கானை சந்தித்து கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாகவும், தன்னை கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக் குமாறும் கேட்டுக்கொண்டார்.  இருப்பினும் ஷஹார்யர் கானின் வேண்டுகோளை ஏற்று கேப்டன் பதவியில் தொடர அவர் ஒப்புக்கொண்டதாக பாகிஸ் தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.












Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad