Type Here to Get Search Results !

50 ஆண்டுகளில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த தென்ஆப்பிரிக்க வீரர் பியட்




இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் டேனி பியட் புதிய சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.  தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் காயம் காரணமாக வெளியேறினாலும் அந்த அணியின் ’ஆஃப் ஸ்பின்னர்’ பியட் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  கடந்த 50 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவின் ’ஆஃப் ஸ்பின்னர்’ யாரும் ஒரு இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தியது கிடையாது. இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.  இதற்கு முன் ’ஆஃப் ஸ்பின்னர்’ ப்ரோம்பீல்டு 1965ம் ஆண்டு ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad