Type Here to Get Search Results !

பட விழாவில் பாம்புடன் வந்த படக்குழுவினர்



‘விடாயுதம்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் 'ஸ்லம்டாக் மில்லியனர்' புகழ் தன்வி லங்கோர் நாயகியாக நடித்துள்ளார். ராம் சரவணன் நாயகனாக நடித்துள்ளார். நாகமானிசி இப்படத்தை இயக்கியிருக்கிறார்.  இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் அபிராமி ராமநாதன், பெருந்துளசி பழனிவேல், வெங்கடேஷ், ஜாக்குவார் தங்கம், பவர் ஸ்டார் சீனிவாசன், தருண் கோபி, ராஜ்கபூர், விஜய் முரளி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.  இவர்களுடன் சிறப்பு விருந்தினராக நிஜ பாம்பை படக்குழுவினர் கொண்டு வந்திருக்கின்றனர். விழாவிற்கு வந்த அனைவரும் நிஜ பாம்பைப் பார்த்து பயந்து நின்றனர். குறிப்பாக மேடையில் இருந்த சிறப்பு விருந்தினர்கள் மிகவும் பயப்பட்டார்கள்.  பாம்பை வைத்து பேய் படமாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். பாம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் நிஜ பாம்பை பட விழாவிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் பாம்பை மையமாக வைத்து வெளியான படங்கள் வெற்றி பெறும் என்ற சென்டிமென்ட் இருக்கிறது. அதுபோல், சமீபகாலமாக பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால், இப்படம் வெற்றி பெறும் என்று விழாவிற்கு வந்தவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad