Type Here to Get Search Results !

தோழியை தாக்கிய வழக்கு: இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா கைது!





இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா தோழியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த செப்ரெம்பர் மாத இறுதியில் பெங்களூரில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா பங்கேற்றார்.  அப்போது அங்கு உள்ள நட்சத்திர ஹொட்டலில் பெண் தோழியை சந்தித்த போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  இந்த மோதலில் அமித் மிஸ்ரா அவரை தகாத வார்த்தைகளில் திட்டியும், கடுமையாக தாக்கியும் உள்ளார்.  இது தொடர்பாக அந்த பெண் அசோக் நகர் காவல் நிலையத்தில், அமித் மிஸ்ரா தன்னை பாலியல் ரீதியாக தாக்கியதாக புகார் அளித்தார்.  இதன் அடிப்படையில் அமித் மிஸ்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அமித் மிஸ்ரா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.  இதையடுத்து, பெங்களூர் போலீசார்  முன் இன்று விசாரணைக்கு அமித் மிஸ்ரா ஆஜரானார்.  அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்திய பொலிசார் அவரை கைது செய்தனர். இருப்பினும், உடனடியாக அமித் மிஸ்ரா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad